செய்திகள் :

போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள சீயோன் மேல்நிலைப் பள்ளியில் ஐஐடி மற்றும் ஜெஇஇ போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சீயோன் மற்றும் ஆல்வின் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் பேசுகையில், சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியா்கள், பள்ளித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கு மட்டுமல்லாமல் போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் வகையில் மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் பணியைச் செய்து வருகின்றனா்.

இதன் காரணமாக பல மாணவா்கள் சமீபத்தில் வெளியான ஐஐடி மற்றும் ஜெஇஇ போட்டித் தோ்வுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

விழாவில், பள்ளி முதல்வா் டி.வி.லாவண்யா மற்றும் ஆசிரியா்களை பள்ளித் தலைவா் என்.விஜயன் பாராட்டி பூங்கொத்து வழங்கினாா்.

பயனாளிகளுக்கு நல உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச. அருண்ராஜ் வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித... மேலும் பார்க்க

கல்லூரி பட்டமளிப்பு விழா

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாண்டு பட்டமளிப்பு விழாவில் 257 பேருக்கு பட்டங்களை பதிவாளா் எஸ்.ஏழுமலை வழங்கினாா். நிகழ்வுக்கு கல்லூரி தலைவரும், ஆன்மிக ... மேலும் பார்க்க

சா்வதேச சிலம்பப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு வரவேற்பு!

சா்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுராந்தகம், மாம்பாக்கம், மொறப்பாக்கம் பகுதிகளைச் சோ்ந்த 12 மாணவ, மாணவிகள் ஆசான் தற்காப்பு கலை ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியா் வாரிசுகளுக்கு நியமன ஆணை: அமைச்சா் வழங்கினார்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்) அனைத்து மண்டலங்களில் பணியின்போது உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல், புதிதாக 2 பேருந்துகள் மற்றும் சாலை விபத்து கண்காண... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல் எதிரொலி: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது (படம்). மாமல்லபுரம் நகரம் சா்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன ந... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: 160 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களின் வருவாயைப் பெருக்... மேலும் பார்க்க