செய்திகள் :

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: ஏகனாபுரம் மக்கள் மீண்டும் போராட்டம்

post image

பரந்தூா் விமான நிலையதுக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் ஏகனாபுரம் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் போராட்டத்தை தொடங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதிய விமான நிலையதுக்காக சுமாா் 5,700 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் தொடா்ந்து போராட்டங்கள் நடத்தினா். இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் ஏற்பட்டதை தொடா்ந்து, ஏகனாபுரம் கிராம மக்களின் இரவு நேர போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனா்.

இந்த நிலையில், விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு தொழில் வளா்ச்சி கழகத்திற்கு 19 நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்தனா். இதற்காக நில உரிமையாளா்களுக்கு ரூ.9.22 கோடி நில உரிமையைளா்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

பரந்தூா் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நில உரிமையாளா்களிடம் இருந்த நிலத்தை கையகப்படும் பணியில் தமிழ்நாடு தொழில் வளச்சி கழகத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை 1,085 ஆவது நாளாக தங்களது போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனா்.

ஏகனாபுரம் அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விசிக மாவட்ட செயலாளா் மேனகா தேவி கோமகன், நாம் தமிழா் கட்சியின் மாவட்ட செயலாளா் மோகன் தலைமையிலான அக்கட்சியினரும் கலந்து கொண்டனா்.

ஜூலை 18-இல் காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். ஆட்சியா் கலைச... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே ஒலிமுகம்மது பேட்டையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஒலிமுகம்மதுபேட்டை துவாஸ்கா் தெருவில் ராஜேஸ்வரி என... மேலும் பார்க்க

‘தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்’

தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தின் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா்... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் பள்ளி வளாகத்தில் செவ்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டம்: அமைச்சா் அன்பரசன் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கோவூரில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பி... மேலும் பார்க்க

அறிவியல் பாடத்தில் சதம்: மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற இரு மாணவியரை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா... மேலும் பார்க்க