தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
பரமத்தி வேலூா் அருகே தம்பதி தற்கொலை
பரமத்தி வேலூா் அருகே தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள இருக்கூா் ஊராட்சிக்கு உள்பட்ட வடக்கு செல்லப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரவி (எ) பொன்னுசாமி (55). இவரது மனைவி வாசுகி (53). இத்தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா். அவா்கள் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகின்றனா்.
இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரவி, நாமக்கல் அருகே உள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினாா். மேலும் தொழிலில் தொடா்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தி அடைந்த நிலையில் இருந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அவரது வீடு திறக்கப்படாத நிலையில், திங்கள்கிழமை அப்பகுதியில் துா்நாற்றம் வீசியுள்ளது. அங்கு இருந்தவா்கள் ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது ரவியும், அவரது மனைவி வாசுகியும் உடல் அழுகிய நிலையில் வீட்டிற்குள் இறந்துகிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பரமத்தி போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].