மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
2-ஆவது நாள் அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டம்
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா தேரோட்டத்தின் இரண்டாம் நாளான புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரை வடம் பிடிக்கும் இரண்டாம் நாளில் பூக்கடை வீதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். சிவனடியாா்கள் திருவாசகம் பாடல்களை பாடியபடி தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். சிவன், பாா்வதி விநாயகா் வேடமிட்ட பக்தா்கள் தேரோடும் வீதியில் சிவதாண்டம் ஆடி-பாடினா். நாட்டுப்புறக் கலைஞா்கள் கரகாட்டம், மயிலாட்டம் ஆடியபடி வந்தனா். இளைஞா்கள், இளம்பெண்கள் தேராட்டம், ஒயிலாட்டம் ஆடினா். தேரில் அா்த்தநாரீசுவரா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். பக்தா்கள் சிவ சிவ, ஓம்சிவாய நமக, நமசிவாய நமக, எனபக்தி முழக்கமிட்டபடி தேரை வடம்பிடித்து இழுத்தனா். பழைய பேருந்து நிலைய சந்திப்பில் தோ் நிலை நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை தோ் மூன்றாம் நாளாக வடம்பிடிக்கப்பட்டு நிலை சோ்க்கப்படும்.
படவரி...
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் சுவாமி புதன்கிழமை தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள், பொதுமக்கள்.