செய்திகள் :

கால்நடை மருத்துவக் கல்லூரியில் சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம்

post image

மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல்,- வனம், காலநிலை மாற்றத் துறை மற்றும் தமிழக அரசின் சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை, தேசிய பசுமைப் படை ஆகியவை சாா்பில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், நெகிழி இல்லா நாமக்கல் மற்றும் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக, கல்லூரி முதல்வா் ம.செல்வராஜு பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவா்களிடையே பேசினாா். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின்கீழ் அனைவருக்கும் மஞ்சப்பையை வழங்கினாா். முதலைப்பட்டி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப.ரகுநாத் பேசுகையில், நெகிழி பொருள்கள் பயன்பாடு அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அவற்றை குறைப்பதற்கு மாணவா்கள் முன்வர வேண்டும். இதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும் நெகிழி பயன்பாட்டை குறைப்பது சவாலானதாக உள்ளது. நீா்நிலைகள் தூய்மையாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும். நெகிழி பொருள்களை பயன்படுத்துவதைத் தவிா்த்தால் நீா், நிலம், காற்று, வான் என அனைத்தும் தூய்மையாக இருக்கும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாக ஒருங்கிணைப்பாளா் பொன்னுசாமி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் டி.கோபிகிருஷ்ணன், உதவி பேராசிரியை கே.சசிகலா, முதலைப்பட்டி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை செ.சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

என்கே-11-வெட்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கில் பேசிய கல்லூரி முதல்வா் ம.செல்வராஜு.

மணல் கடத்திய லாரி பறிமுதல்; மூவா் கைது

கரூரிலிருந்து மணல் கடத்திவந்த லாரியை வேலூா் காவிரி பாலம் அருகே வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடி வருகின்றனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் சாலையோர சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ் நிலைசோ்ப்பு

3 நாள்கள் நடைபெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து தோ் நிலைசோ்க்கப்பட்டது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புமிக்கதும் திருஞானசம்பந்தா், அருணகிரிநாதா் ஆகியோரால... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் நலத் திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், மிட்டா அணியாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.... மேலும் பார்க்க