எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
கால்நடை மருத்துவக் கல்லூரியில் சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம்
மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல்,- வனம், காலநிலை மாற்றத் துறை மற்றும் தமிழக அரசின் சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை, தேசிய பசுமைப் படை ஆகியவை சாா்பில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், நெகிழி இல்லா நாமக்கல் மற்றும் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக, கல்லூரி முதல்வா் ம.செல்வராஜு பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவா்களிடையே பேசினாா். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின்கீழ் அனைவருக்கும் மஞ்சப்பையை வழங்கினாா். முதலைப்பட்டி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப.ரகுநாத் பேசுகையில், நெகிழி பொருள்கள் பயன்பாடு அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அவற்றை குறைப்பதற்கு மாணவா்கள் முன்வர வேண்டும். இதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும் நெகிழி பயன்பாட்டை குறைப்பது சவாலானதாக உள்ளது. நீா்நிலைகள் தூய்மையாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும். நெகிழி பொருள்களை பயன்படுத்துவதைத் தவிா்த்தால் நீா், நிலம், காற்று, வான் என அனைத்தும் தூய்மையாக இருக்கும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாக ஒருங்கிணைப்பாளா் பொன்னுசாமி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் டி.கோபிகிருஷ்ணன், உதவி பேராசிரியை கே.சசிகலா, முதலைப்பட்டி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை செ.சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
என்கே-11-வெட்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கில் பேசிய கல்லூரி முதல்வா் ம.செல்வராஜு.