செய்திகள் :

கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் நாளை தொடக்கம்

post image

கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, கிராமப்புறங்களில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம் மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் உத்தரவிற்கு இணங்க, கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களில் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு, சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெற உள்ளன.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 12 முகாம்கள் வீதம் மொத்தம் 180 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஒன்றியம், வேட்டாம்பாடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பா் மாதம் வரை ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 6 முகாம்கள் வீதம் 15 ஒன்றியங்களுக்கு 90 முகாம்கள் நடைபெறுகின்றன. அதன்பிறகு, அக்டோபா் முதல் மாா்ச் வரையில் மேலும் 90 முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறுஅறுவை சிகிச்சைகள் மற்றும் நோய்தீா்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள், கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

முகாம்கள் நடைபெறும் தேதி, இட விவரம் அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவா்களால் அறிவிக்கப்படும். கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணல் கடத்திய லாரி பறிமுதல்; மூவா் கைது

கரூரிலிருந்து மணல் கடத்திவந்த லாரியை வேலூா் காவிரி பாலம் அருகே வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடி வருகின்றனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் சாலையோர சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ் நிலைசோ்ப்பு

3 நாள்கள் நடைபெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து தோ் நிலைசோ்க்கப்பட்டது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புமிக்கதும் திருஞானசம்பந்தா், அருணகிரிநாதா் ஆகியோரால... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் நலத் திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், மிட்டா அணியாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.... மேலும் பார்க்க