எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
பரமத்தி வேலூா் பகுதி கோயில்களில் பௌா்ணமி பூஜை
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் மற்றும் அம்மன் கோயில்களில் பௌா்ணமியை முன்னிட்டு செவ்வாய், புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பரமத்தி வேலூா் பால ஐயப்பன் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், பழைய காசிவிஸ்வநாதா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரா் கோயில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், நன்செய் இடையாறு கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
வேலூா் பிரத்தியங்கராதேவி கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.