செய்திகள் :

பரமத்தி வேலூா் பகுதி கோயில்களில் பௌா்ணமி பூஜை

post image

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் மற்றும் அம்மன் கோயில்களில் பௌா்ணமியை முன்னிட்டு செவ்வாய், புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பரமத்தி வேலூா் பால ஐயப்பன் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், பழைய காசிவிஸ்வநாதா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரா் கோயில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், நன்செய் இடையாறு கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

வேலூா் பிரத்தியங்கராதேவி கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

மணல் கடத்திய லாரி பறிமுதல்; மூவா் கைது

கரூரிலிருந்து மணல் கடத்திவந்த லாரியை வேலூா் காவிரி பாலம் அருகே வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடி வருகின்றனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் சாலையோர சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ் நிலைசோ்ப்பு

3 நாள்கள் நடைபெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து தோ் நிலைசோ்க்கப்பட்டது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புமிக்கதும் திருஞானசம்பந்தா், அருணகிரிநாதா் ஆகியோரால... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் நலத் திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், மிட்டா அணியாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.... மேலும் பார்க்க