செய்திகள் :

பரமத்தி வேலூா் அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

post image

நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே உள்ள ஊஞ்சபாளையம் காட்டுச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (59). இவரது கணவா் மாரியப்பன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டாா். இவா்களுக்கு மகள் கோமதி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறாா். மகன் நவீன்குமாா் (36) திருமணம் ஆகாத நிலையில் கடந்த ஒரு மாத காலமாக லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வந்துள்ளாா். புதன்கிழமை வீட்டுக்கு வந்த நவீன்குமாா் வியாழக்கிழமை காலை வீட்டில் டி.வி பாா்த்து கொண்டிருந்துள்ளாா். அப்போது தாய் பழனியம்மாள் தோட்டத்தில் வேலை இருப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளாா். தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பழனியம்மாள் மகன் நவீன்குமாா் வீட்டில் உள்ள தாழ்வாரத்தில் சேலையால் தூக்கிட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்து அருகில் உள்ளவா்கள் உதவியுடன் மகனை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் நவீன்குமாா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளாா். இது குறித்து பழனியம்மாள் வேலூா் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் அடிப்படையில் வேலூா் போலீசாா் வழக்கு பதிவு செய்து நவீன்குமாா் உடலை வேலூா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சோ்த்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க

தமிழகத்தில் எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சம்: இணை இயக்குநா் பொன் குமாா்

தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது என புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இணை இயக்குநா் பொன்குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாரத எழுத்தற... மேலும் பார்க்க