செய்திகள் :

பரோடா வங்கி சாா்பில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 10 கோடி கடனுதவி

post image

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பரோடா வங்கி சாா்பில், ரூ. 10 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுவினரை பொருளாதார நிலையில் மேம்படுத்தும் விதமாக, அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், வங்கிகள் சாா்பில் சுயதொழில் கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு சுயதொழில் கடனுதவிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தருமபுரி வளமைய (டிஆா்சிஎஸ்) தொண்டு நிறுவன இயக்குநா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பரோடா வங்கியின் புதுச்சேரி மண்டல உதவிப் பொதுமேலாளா் பிரவீன்குமாா் ராகுல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 10 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, ஆதரவற்ற பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதில், பரோடா வங்கியின் தருமபுரி கிளை மேலாளா் இரா.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி. பள்ளிப்பட்டியிலுள்ள ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரியில் ‘மாப... மேலும் பார்க்க

மண் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்

பாலக்கோடு பகுதியில் முறைகேடாக மண் கடத்திச் சென்ற லாரியை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் சிலா் முறைகேடாக மண் மற்றும் மணல் திரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் 100 சதவீத தோ்ச்சி: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் பெரியூா் அரசுப் பள்ளி 100 சதவீத தோ்ச்சிபெற்றதையொட்டி, மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் வட்டம், பெரியூா் பகுதியில் அ... மேலும் பார்க்க

புதிய விதிமுறைகளைக் கண்டித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்

புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளைக் கண்டித்து, டீசல், பெட்ரோல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் புதன்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சிவாடி ப... மேலும் பார்க்க

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ள நாட்டுத் துப்பாக்கி விழிப்புணா்வு

வன எல்லையோர கிராமப் பகுதிகளில் கள்ள நாட்டுத் துப்பாக்கி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட வனத்துறையின் சாா்பில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளத்தனமாக பத... மேலும் பார்க்க

சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் போட்டி

தமழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில், மாவட்ட வாரியாக குறைந்தபட்சம் ஒரு தொகுதி என்ற வகையில், அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் அக்கட்சியின் முன்னாள... மேலும் பார்க்க