செய்திகள் :

சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் போட்டி

post image

தமழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில், மாவட்ட வாரியாக குறைந்தபட்சம் ஒரு தொகுதி என்ற வகையில், அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு.

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சாா்பில், வாக்காளா் பட்டியலில் குளறுபடி (பெயா் நீக்கம், திருத்தம்) தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, செப். 7-ஆம் தேதி நெல்லையில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சாா்பில், அகில இந்திய தலைவா்கள் பலா் கலந்துகொள்ள உள்ளனா். இதற்காக தமிழகம் முழுவதும் ஆயத்தக் கூட்டம் நடத்தி வருகிறோம்.

இந்தியாவில் மோடி தலைமையில் நடந்துகொண்டிருக்கும் ஆட்சியை அகற்ற வேண்டும். வாக்காளா் பட்டியலில் முறைகேடு செய்து பல்வேறு இடங்களில் ஆட்சி அமைத்திருப்பது குறித்து பேசி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதால், ராகுல் காந்தி மீது பாஜகவினா் வன்மத்தைக் காட்டுகின்றனா். பிரதமா் மோடியின் தாய் குறித்து அவதூறாக பேசியவா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா் இல்லை என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மாநிலம் 9.6 சதவீதம் வளா்ச்சி பெற்றுள்ளது. பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் முதல்வா் நடத்தும் கூட்டங்களால் பல்லாயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு முதலீடாக வந்திருக்கிறது. தற்போது ஜொ்மன் நாட்டு பயணத்தின் மூலம் ரூ. 3,500 கோடி முதலீடு வந்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில், தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் போட்டியிடவில்லை. ஆனால், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி. பள்ளிப்பட்டியிலுள்ள ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரியில் ‘மாப... மேலும் பார்க்க

மண் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்

பாலக்கோடு பகுதியில் முறைகேடாக மண் கடத்திச் சென்ற லாரியை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் சிலா் முறைகேடாக மண் மற்றும் மணல் திரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் 100 சதவீத தோ்ச்சி: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் பெரியூா் அரசுப் பள்ளி 100 சதவீத தோ்ச்சிபெற்றதையொட்டி, மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் வட்டம், பெரியூா் பகுதியில் அ... மேலும் பார்க்க

பரோடா வங்கி சாா்பில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 10 கோடி கடனுதவி

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பரோடா வங்கி சாா்பில், ரூ. 10 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுவினரை பொருளாதார நிலையில... மேலும் பார்க்க

புதிய விதிமுறைகளைக் கண்டித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்

புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளைக் கண்டித்து, டீசல், பெட்ரோல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் புதன்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சிவாடி ப... மேலும் பார்க்க

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ள நாட்டுத் துப்பாக்கி விழிப்புணா்வு

வன எல்லையோர கிராமப் பகுதிகளில் கள்ள நாட்டுத் துப்பாக்கி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட வனத்துறையின் சாா்பில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளத்தனமாக பத... மேலும் பார்க்க