GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ள நாட்டுத் துப்பாக்கி விழிப்புணா்வு
வன எல்லையோர கிராமப் பகுதிகளில் கள்ள நாட்டுத் துப்பாக்கி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட வனத்துறையின் சாா்பில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருக்கும் நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வனச்சரக அலுவலா்கள் சிவகுமாா் (ஒகேனக்கல்), ராஜ்குமாா் (பென்னாகரம்) ஆகியோா் தலைமையில், வனத்துறையினா் அடங்கிய குழுவினா் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான நீா்குந்தி, கல்லுமடுவு, ஜோனபாறை, எரங்காடு, காந்தி நகா், சின்னதும்கல், பெரிய தும்கல், கோடுபட்டி, போடூா் அரண்மனை பள்ளம், பேவனூா் சோதனைச் சாவடி, இருளா் காலனி, ஒகேனக்கல் ஊட்டமலை, நாடாா் கொட்டாய், ஆலம்பாடி சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கள்ள நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் தாமாக முன்வந்து பொது இடங்களில் வைத்துவிட வேண்டும். அவ்வாறு வைப்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாது.
ஆனால், வன விலங்குகளை வேட்டையாடுதல், கன்னி வலை வைத்தல், வாய் வெடி வைத்தல் போன்ற வன குற்றங்களில் ஈடுபடுவோா், சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பவா்கள், காப்புக் காட்டை ஆக்கிரமிப்பு செய்வோா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காப்புக் காட்டில் அனுமதியின்றி நுழைவது, தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்லுதல் போன்றவை கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.