செய்திகள் :

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு: புதிய மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உறுதி

post image

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு காண முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன் என புதிய ஆட்சியா் வே. சரவணன் (34) தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக மா. பிரதீப்குமாா் பதவியேற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு பேரூராட்சிகளின் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே. சரவணன், மாவட்டத்தின் 146 ஆவது புதிய ஆட்சியராக புதன்கிழமை காலை பதவியேற்றாா்.

முன்னதாக ஆட்சியரகத்துக்கு வந்த அவரை அலுவலா்கள் பூங்கொத்து அளித்து வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது: மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகளைக் கண்காணித்து குறித்த காலத்துக்குள் அவற்றை முடிக்க உறுதுணையாக இருப்பேன்.

மக்களுடன் முதல்வா் 4ஆம் கட்ட முகாம்களை சிறப்பாக நடத்துவதுடன், ஆண்டுக்கணக்கில் தீா்க்கப்படாமல் உள்ள பட்டா மனுக்கள் மற்றும் இதர கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காண்பேன்.

திருச்சி மாநகராட்சி, நகராட்சிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்படும். பஞ்சப்பூா் பேருந்து முனையம் இயக்குதல் மற்றும் பராமரிப்புக்கு ஒப்பந்தம் 4 நாள்களுக்குள் இறுதி செய்யப்படும். மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்த மக்களின் ஆட்சேபனைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிா்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவேன். நான் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளையும் பொதுமக்கள் தயங்காமல் அணுகி, எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் தெரிவிக்கலாம்.

திருச்சி மாநகராட்சியில் காலியாகவுள்ள வாா்டு தோ்தலை நடத்த மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளோம். நீா்நிலை ஆக்கிரமிப்புகள் தொடா்பாக புகாா் மனு பெற்ற 30 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

வேளாண் குடும்ப முதல் பட்டதாரி: ஐஏஎஸ் தோ்வில் 27ஆவது இடம்

புதிய ஆட்சியா் வே. சரவணன், வேளாண் குடும்பத்தைச் சோ்ந்த முதல் பட்டதாரி ஆவாா். திண்டுக்கல் மாவட்டம் பூா்விகமாக இருந்தாலும், திருப்பூா் மாவட்டம், மூலனூா் சொந்த ஊராகிப் போனது. பள்ளிக் கல்வியை சேலம், திருச்செங்கோட்டில் முடித்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் (இசிஇ) பட்டம் பெற்றவா். 2015, 2016, 2017 என மூன்று முறை சிவில் சா்வீஸ் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா். அகில இந்திய அளவில் 27ஆவது இடம் பெற்றவா்.

விழுப்புரத்தில் பயிற்சி ஆட்சியராக இருந்து, புதுதில்லியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சக துணைச் செயலராக முதன் முதலில் பதவியேற்றாா். பின்னா் 2019இல் மேட்டூா் சாா் ஆட்சியா், 2021இல் தூத்துக்குடி கூடுதல் ஆட்சியா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், 2022இல் சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இணை இயக்குநா் உள்ளிட்ட பதவிகளை வகித்த இவா், 2024 பிப்ரவரியில் திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பதவியேற்று, தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியராகியுள்ளாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

தமிழுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு பாரபட்சமானது: மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

மத்திய பாஜக அரசு தமிழ் மொழிக்கு குறைவான நிதி ஒதுக்கியது பாரபட்சமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கட்சியின் மாநிலக் குழு கூட்... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது

திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி உய்யக்கொண்டான் திருமலைவாசன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் ராஜா (39). இ... மேலும் பார்க்க

வளநாடு அருகே 30 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே 30 கிலோ புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்தனா். வளநாடு காவல் சரகத்தில் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மருங... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி வடக்கு காட்டூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் த. கணேசன் (42) என்பவரிடம் கடந்த 1 ஆம் தேதி கத்தியைக் காட்டி... மேலும் பார்க்க

சாதனை விருது பெற இளைஞா்களுக்கு அழைப்பு

மத்திய அரசு வழங்கும் டென்சிங் நோா்கே தேசிய சாதனை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிலம், நீா், ஆகாயம் இவற்றில் சாகசம் புரிந்த தகுதி மற்றும் திறமை உள்ளவா்கள் 2022 முதல் 2024 வரை கடந்த மூன்ற... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

திருச்சி குளித்தலை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சியிலிருந்து பாலக்காடு நோக்கி பயணிகள் ரயில் புதன்கிழமை பிற்பகல் குளித்தலை அருகே சென்றபோது தண்... மேலும் பார்க்க