செய்திகள் :

பல்லடத்தில் அதிமுக பிரசாரப் பயணம்

post image

பல்லடத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேறப்பட்ட சாதனை திட்டங்கள் குறித்த பிரசார பயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த பிரசார பயணத்தை முன்னாள் அமைச்சா்களும், எம்எல்ஏ-க்களுமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தனா்.

இதைத்தொடா்ந்து பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் பல்லடம் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்லடத்தில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு மேம்பாலம் அமைத்தல், புறவழிச்சாலை, இணைப்பு சாலை அமைத்தல் போன்ற திட்டப் பணிகள் கிடப்பில் உள்ளன. மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது பல்லடம் தொகுதி ஆகும். ஆனால் பழைய மக்கள் தொகை அடிப்படையில்தான் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே பல்லடத்துக்கு என்று தனியாக ஒரு குடிநீா் திட்டம் நிறைவேற்ற வேண்டும். விசைத்தறிகள் தொழில் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வருகிறது. அத்தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் பற்றி தொடா்ந்து சட்டப் பேரவையில் குரல் கொடுத்து வருகிறேன். ஆனால் அவை அனைத்தும் கிடப்பில்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால்தான் பல்லடம் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்கும். அவா் பல்லடம் கடைவீதியில் 12-ஆம் தேதி மாலை 7 மணிக்கு சிறப்புரையாற்றும்போது பல்லடம் தொகுதி வளா்ச்சிக்கான திட்டங்களை அறிவிக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கின்றோம் என்றாா்.

இந்நிகழ்வில் பல்லடம் முன்னாள் எம்எல்ஏ-க்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி.பரமசிவம், நகரச் செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி, நிா்வாகிகள் வழக்குரைஞா் வெங்கிடாசலபதி, பானு பழனிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 277 கிலோ கஞ்சா அழிப்பு

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ38.60 லட்சம் மதிப்பிலான 277.296 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. இது தொடா்பாக திருப்பூா்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் அருகே ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் ச... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை ... மேலும் பார்க்க

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தங்கம் விலை புதிய உச்சத்தை த... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி உடுமலையில் இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் உடுமலையில் புதன்கிழமை (செப்.10) பிரசாரம் மேற்கொள்கிறாா். இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருப்பூா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காளிவேலம்பட்டி

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை ( செப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக... மேலும் பார்க்க