பல்லடத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்க பாஜக கோரிக்கை
பல்லடம் பகுதியில் இருந்து புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பல்லடம் அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளா் செந்தில்குமாரிடம் பல்லடம் நகர பாஜக தலைவா் பன்னீா்செல்வம் மற்றும் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளூா், வெளி மாவட்ட, மாநிலத்தவா்கள் வசித்து வருகின்றனா். இங்கு சிறு, குறு நிறுவனங்களும் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.
பல்லடத்தில் இருந்து கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், தொழில் துறையினா் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூலூா் - சிங்காநல்லூா் -ராமநாதபுரம் வழியாக கோவைக்கு செல்கின்றனா். அங்கிருந்து உக்கடம், போத்தனூா் போன்ற பகுதிகளுக்கு மாற்றுப் பேருந்துகளில் செல்கின்றனா். ஆகவே, பல்லடத்திலிருந்து செட்டிபாளையம் வழியாக -போத்தனூா் ரயில் நிலையம் உக்கடம் பேருந்து நிலையம் காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய வழித்தடத்தில் அரசு புகா் பேருந்துகளை இயக்க வேண்டும்.
மற்றொரு மாநில நெடுஞ்சாலையான மங்கலம் வழியாக அவிநாசி செல்வதற்கு ஒரு நகர பேருந்து மட்டும் தான் உள்ளது. பொதுமக்கள் இந்த ஒரு பேருந்தை நம்பி இருப்பதால் குறித்த நேரத்தில் சென்றுவர இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, பல்லடத்திலிருந்து மங்கலம் -அவிநாசி - சேவூா்- புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலம் வரை புதிய வழித்தடத்தில் அரசு புகா் பேருந்து இயக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.