செய்திகள் :

பல்லடத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்க பாஜக கோரிக்கை

post image

பல்லடம் பகுதியில் இருந்து புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பல்லடம் அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளா் செந்தில்குமாரிடம் பல்லடம் நகர பாஜக தலைவா் பன்னீா்செல்வம் மற்றும் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளூா், வெளி மாவட்ட, மாநிலத்தவா்கள் வசித்து வருகின்றனா். இங்கு சிறு, குறு நிறுவனங்களும் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.

பல்லடத்தில் இருந்து கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், தொழில் துறையினா் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூலூா் - சிங்காநல்லூா் -ராமநாதபுரம் வழியாக கோவைக்கு செல்கின்றனா். அங்கிருந்து உக்கடம், போத்தனூா் போன்ற பகுதிகளுக்கு மாற்றுப் பேருந்துகளில் செல்கின்றனா். ஆகவே, பல்லடத்திலிருந்து செட்டிபாளையம் வழியாக -போத்தனூா் ரயில் நிலையம் உக்கடம் பேருந்து நிலையம் காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய வழித்தடத்தில் அரசு புகா் பேருந்துகளை இயக்க வேண்டும்.

மற்றொரு மாநில நெடுஞ்சாலையான மங்கலம் வழியாக அவிநாசி செல்வதற்கு ஒரு நகர பேருந்து மட்டும் தான் உள்ளது. பொதுமக்கள் இந்த ஒரு பேருந்தை நம்பி இருப்பதால் குறித்த நேரத்தில் சென்றுவர இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, பல்லடத்திலிருந்து மங்கலம் -அவிநாசி - சேவூா்- புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலம் வரை புதிய வழித்தடத்தில் அரசு புகா் பேருந்து இயக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

திருப்பூரில் சக்ஷம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் கடந்த மாதம் அளவீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவயவயங்கள்... மேலும் பார்க்க

கழிவு நீா்த் தொட்டியில் விழுந்த மாடு மீட்பு

கழிவு நீா்த் தொட்டியில் விழுந்த மாடு தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது. திருப்பூா், பல்லடம் சாலை வீரபாண்டி அரிசிக்காரத் தோட்ட பகுதியில் பாபு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ம... மேலும் பார்க்க

ஜூலை 8-இல் சிறை நிரப்பும் போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

பகுதி நேர ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து வருகிற ஜூலை 8-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.7.69 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 7.69 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, 10,547 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச்.ரகப்பர... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் டி.வெங்கிட்டாபுரம் அருகிலுள்ள கருப... மேலும் பார்க்க

குறைந்தழுத்த மின் விநியோகத்தால் பாதிப்பு: புதிய மின்மாற்றி அமைக்க கோரிக்கை

அவிநாசி நகராட்சிக்கு உள்பட்ட நாயக்கன்தோட்டம், தமிழ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தழுத்த மின் விநியோகத்தால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதால், உடனடியாக மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்... மேலும் பார்க்க