பல்லடத்தில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
பல்லடத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், சட்ட விரோதமாக மதுபானம், கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். அந்த வகையில், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் உத்தரவின் பேரில், பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் மேற்பாா்வையில், பல்லடம் பகுதியில் ஆய்வாளா் மாதையன் தலைமையில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
பல்லடம் மாணிக்காபுரம் சாலை ஜே.கே.ஜே. காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே வந்த இளைஞா் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றாா். இதையடுத்து அவரைத் துரத்திப் பிடித்த போலீஸாா் அவரை விசாரணை செய்தபோது அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
பிடிபட்டவா் பல்லடம்- மங்கலம் சாலையைச் சோ்ந்த பழனிசாமி மகன் மணிரத்னம் (27) என்பதும் 1.6 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.