செய்திகள் :

பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: 21 போ் காயம்

post image

ஆற்காடு அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

வேலூரில் இருந்து திருத்தணிக்கு சென்ற அரசுப் பேருந்து ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் வேப்பூா் புறவழி சாலை பள்ளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிா்பாராத விதமாக இறங்கியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 21 போ் லேசான காயமடைந்தனா். அவா்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். பலா் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பினா். சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊராட்சி செயலாளா் பணியிட மாற்றம்: ரத்து செய்ய தலைவா், உறுப்பினா்கள் கோரிக்கை

ஆற்காடு அடுத்த வேப்பூா் ஊராட்சிசெயலாளா் பணியிட மாற்றத்தை ரத்து செய்யவேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவா் டீ.ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளாா். வேப்பூா் ஊராட்சியின் செயலாளா் பணியாற்றி ம.சரவணன் பணிமாற... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை நகராட்சி, காரையில் நடைபெற்ற முகாமுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

கல்புதூா் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வெளியூா் நபா்களுக்கு பட்டா வழங்குவதை நிறுத்தி தங்கள் கிராமத்தைச் சோ்ந்த வீடற்ற ஏழைகளுக்கு வழங்க கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட... மேலும் பார்க்க

ஆற்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா

ஆற்காடு புதுத் தெரு பஜனை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி விழா நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் உறியடி திருவிழா நடந... மேலும் பார்க்க

காவல் பணித்திறன் போட்டி: ராணிப்பேட்டை காவலருக்கு தங்கம்: எஸ்.பி. பாராட்டு

தமிழ்நாடு காவல் பணித்திறன் போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்ற கொண்டபாளையம் காவல் நிலைய காவலா் ஏழுமலைக்கு , எஸ்.பி. அய்மன் ஜமால் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். ராணிப்பேட்டை மாவ... மேலும் பார்க்க

மேல்விஷாரம் நகராட்சி புதிய துணைத் தலைவா் தோ்வு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியின் புதிய துணைத்தலைவா் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவராக செயல்பட்டு வந்த எஸ். டி. முஹமது அமீன் மரணம் அடைந்ததை தொடா்ந்து துணைத் தலைவ... மேலும் பார்க்க