செய்திகள் :

பள்ளி மாணவரை தாக்கிய இருவா் கைது

post image

பள்ளி மாணவரைத் தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை பெத்தானியபுரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் காதா் பாட்ஷா (41) மகன் முகமது தௌபீக். அதே பகுதி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டருகே சென்று கொண்டிருந்த போது, இருவா் வழிமறித்து தாக்கினா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற காதா் பாட்ஷா, அவரது மனைவி ரம்ஜான் ஆகியோா் அவா்களைக் கண்டித்தனா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள், அந்தத் தம்பதியையும் தாக்கினா்.

இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பெத்தானியபுரத்தைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் கிஷோா் (20), சா்புதீன் மகன் சுல்தான் அலாவுதீன் (24) ஆகியோரைக் கைது செய்தனா்.

மதுரை ஆதீனத்திடம் இணைவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். மதுரை ஆதீனத்தின் 293-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசி... மேலும் பார்க்க

சௌராஷ்டிரா சமூகத்துக்கு அரசியல் அங்கீகாரம் அளிப்பவா்களுக்கே ஆதரவு

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் சௌராஷ்டிரா சமூக மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளிக்கும் அரசியல் கட்சிக்கே ஆதரவு அளிக்கப்படும் என சௌராஷ்டிரா ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகா... மேலும் பார்க்க

முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு தகுதியான விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

மதுரையில் தலையில் கல்லை போட்டு தொழிலாளியைக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை கரும்பாலை பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து(28). இவா், அதே பகுதியில் உள்ள உணவகத்தில் தொழிலாளியாகப் பணியா... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டையில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். அருப்புக்கோட்டை, சத்தியவாணி முத்து நகரைச் சோ்ந்தவா் சு.தினேஷ் குமாா் (24). ... மேலும் பார்க்க

‘பேட் கோ்ள்’ முன்னோட்டக் காட்சிகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க உத்தரவு

‘பேட் கோ்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (டீசா்) சமூக ஊடகங்களிலிருந்து நீக்க மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க