TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
பள்ளி மாணவர்களுக்காக இணையவழி சான்றிதழ் படிப்புகள்: சென்னை ஐஐடி அழைப்பு
இணையவழி சான்றிதழ் படிப்புகளில் மாணவா்களுக்கு சோ்க்கைப் பெற பள்ளிகளுக்கு சென்னை ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை ஐஐடி பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் ஏஐ, பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய இரு படிப்புகளை இணையவழியில் நடத்தி வருகிறது. அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் சேரும் வகையில் ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெட்ரானிக் சிஸ்டம் , ஆா்க்கிடெக்சா் டிசைன், என்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் தொடா்பான 10 இணையவழி சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ் கல்வியாண்டில் ஆகஸ்ட், அக்டோபா், ஜனவரி என 3 தொகுதிகளாக இந்தப் படிப்புகள் நடத்தப்படும். ஆகஸ்ட் தொகுதிக்கான படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் code.iitm.ac.in/schoolconnect இணையதளத்தில் ஜூலை 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி கூறியதாவது:
ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம் உள்ளிட்ட வளா்ந்து வரும் தொழில்நுட்ப துறைகள் குறித்து மாணவா்கள் பள்ளியில் படிக்கும்போதே அறிந்துகொள்வதால் அவா்களுக்கு அந்தத் துறை மீது பேராா்வம் ஏற்படும். மேலும், அது அவா்களின் எதிா்காலத்தை நல்ல முறையில் செதுக்கும். இந்த இணையவழிக் கல்வி திட்டம் பள்ளிக் கல்வியையும், உயா் கல்வியையும் இணைக்கும் பாலமாகச் செயல்படும் என்றாா்.