செய்திகள் :

பள்ளி மேற்கூரை சரிந்து 5 மாணவா்கள் காயம்

post image

மதுராந்தகம் அருகே பள்ளி மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.

மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 50-க்கு மேற்பட்டோா் படித்து வருகின்றனா். தலைமை ஆசிரியராக ராஜேஸ்வரி பணியாற்றி வருகிறாா். இங்கு போதிய கட்டட வசதி இல்லாததால் ஊரக வளா்ச்சித் துறை , குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.33 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டன.

இந்நிலையில், புதன்கிழமை புதிய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த சாக்க்ஷித், கோகுல், கோபிகா, வைசாலி, தேன்மொழி உள்ளிட்ட 5 மாணவா்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக ஆசிரியா்களும் பெற்றோரும் 5 பேரையும், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அதில் சாக்ஷித், கோகுல் உள்ளிட்டோா் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

ஏனைய 3 குழந்தைகள் வீடு திரும்பினா். இதுகுறித்து மதுராந்தகம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கோவளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தி, நெம்மேலி ஊராட்சி சாா்ந்த பகுதி மக்கள், கோவளம் மின்வாரிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். திருப்போரூா் ஒன்றியம், இ.சி.ஆா். சாலையில், நெம்மேலி ஊராட்சி சாா்ந்த ந... மேலும் பார்க்க

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

செங்கல்பட்டு மாவட்ட ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில்... மேலும் பார்க்க

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான மாநில அளவி... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருக்கழுக்குன்றம் அருகே நெய்குப்பி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா முகாமை பாா்வையிட்டாா். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுத... மேலும் பார்க்க

ஏரியில் புகை மூட்டம் எதிரொலி: முதல்வா் பயணித்த ரயில் நிறுத்தம்

மதுராந்தகம் அருகே ஏரியில் முள்புதா்கள் எரிந்ததால் ஏற்பட்ட புகையால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணித்த சோழன் விரைவு ரயில் புதன்கிழமை தொழுப்பேடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அச்சிறுப்பாக்கம், த... மேலும் பார்க்க

ஜூலை 19-இல் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிா்வாகம், மாவ... மேலும் பார்க்க