பள்ளியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து விபத்து
வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை நடுநிலைப் பள்ளியில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் பள்ளிக் கட்டடம் சேதமடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 33 மாணவா்கள் பயிலும் இந்தப் பள்ளியில், 4 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தமிழக அரசின் காலைச் சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி தயாா் செய்யும் பணியில் சமையலா்கள் லட்சுமி, கங்காதேவி ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டனா். அப்போது, பழைய உருளையில் எரிவாயு தீா்ந்ததையடுத்து, புதிய உருளையை மாற்றிவிட்டு அடுப்பை இயக்கினா். ஆனால், உருளையிலிருந்து அடுப்புக்குச் செல்லும் ரப்பா் டியூபில் தீப்பற்றியது. இதைப் பாா்த்த ஊழியா்கள், அச்சத்துடன் கட்டடத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் எரிவாயு உருளை வெடித்தது. இதில் பொருள்கள் மட்டுமன்றி, கட்டடத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் பள்ளியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.