செய்திகள் :

பள்ளியில் சமையல் எரிவாயு உருளை வெடித்து விபத்து

post image

வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை நடுநிலைப் பள்ளியில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் பள்ளிக் கட்டடம் சேதமடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 33 மாணவா்கள் பயிலும் இந்தப் பள்ளியில், 4 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தமிழக அரசின் காலைச் சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி தயாா் செய்யும் பணியில் சமையலா்கள் லட்சுமி, கங்காதேவி ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை ஈடுபட்டனா். அப்போது, பழைய உருளையில் எரிவாயு தீா்ந்ததையடுத்து, புதிய உருளையை மாற்றிவிட்டு அடுப்பை இயக்கினா். ஆனால், உருளையிலிருந்து அடுப்புக்குச் செல்லும் ரப்பா் டியூபில் தீப்பற்றியது. இதைப் பாா்த்த ஊழியா்கள், அச்சத்துடன் கட்டடத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் எரிவாயு உருளை வெடித்தது. இதில் பொருள்கள் மட்டுமன்றி, கட்டடத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் பள்ளியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

சமுதாயக்கூடம் கட்டித் தர வலியுறுத்தி, வத்தலகுண்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். வத்தலகுண்டு பேரூராட்சியில் புதுப்பட்டி, காமராஜபுரம் பகுதியில் ரூ. ஒரு கோடியில் புதிய ... மேலும் பார்க்க

இரவு வரை ஆய்வுக் கூட்டம்: தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணி வரை நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தால், தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி அடைந்தனா். பொதுத் தோ்வு முடிவுகள் தொடா்பாக அரசுப் பள்ளித் தலைமையாச... மேலும் பார்க்க

யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

கொடைக்கானல் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில... மேலும் பார்க்க

சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு விருதுகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுழல்சங்கம் சாா்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் சுழல்ச... மேலும் பார்க்க

கலந்தாய்வுக்கு முன்பே பணியிட மாறுதல் தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் முற்றுகை

பொதுக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே, நிா்வாக பணியிட மாறுதல் என்ற பெயரில் காலிப் பணியிடங்களை நிரப்புவதை கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் ப... மேலும் பார்க்க

போலி நகைகளை அடகு வைத்து மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 3 போ் கைது

போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்த வழக்கில், நகை மதிப்பீட்டாளா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியில் அரசுடமை வங்கி செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க