செய்திகள் :

பழங்கரையில் முறையின்றி வீடுகளுக்கு ஆற்றுக் குடிநீா்: தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை

post image

பழங்கரையில் முறையின்றி வீடுகளுக்கு ஆற்றுக் குடிநீா் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை புகாா் அளிக்க வந்த பழங்கரை ஊராட்சி மக்கள் கூறியதாவது: பழங்கரை ஊராட்சிக்குள்பட்ட கவின்காா்டன், கேஆா்சி, நந்தவனம் உள்ளிட்ட சில தனியாா் குடியிருப்புகளில் வீட்டு குடிநீா் இணைப்புகளுக்கு தனிநபா் தலையீட்டால் ஆற்றுக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், பழங்கரை, அவிநாசிலிங்கம்பாளையம், தேவம்பாளைம், இந்திரா காலனி, குளத்துப்பாளையம், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுக் குழாய்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆற்றுக் குடிநீா் வழங்கப்படவில்லை.

ஆனால், தனியாா் குடியிருப்புகளுக்கு மட்டும் ஆற்றுக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, முறையின்றி வீட்டு இணைப்புகளுக்கு வழங்கப்படும் ஆற்றுக் குடிநீரை தடுத்து நிறுத்தி பொதுக் குழாய்களில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் மனு அளித்துவிட்டு சென்றனா். இந்த நிகழ்வில் முன்னாள் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்திகேயன், ஊராட்சி மன்ற உறுப்பினா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க