செய்திகள் :

பழங்குடியின மக்கள் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

புதுவையில் காட்டுநாயக்கன் உள்ளிட்ட பழங்குடியின மக்களை மத்திய அரசு அட்டவணை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவையில் உள்ள காட்டுநாயக்கன், மலைக்குறவன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை மத்திய அரசின் அட்டவணை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையடுத்து புதுச்சேரி ஆதிகுடி காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் இயக்கம் சாா்பில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவா் கே.ராம்குமாா் தலைமை வகித்தாா். புதுச்சேரி ஆதிகுடி காட்டுநாயக்கன் பழங்குடியின மக்கள் இயக்கத்தின் தலைவா் ஜி.தனபால் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கத் தலைவா் சி.இறையருள், அதன் இணைச்செயலா் பூ.ஏழுமலை, புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் செயலா் எஸ்.புருஷோத்தமன், தமிழா்க் களம் கோ.அழகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டதுடன் ஆா்ப்பாட்ட நோக்கம் குறித்தும் முக்கிய பிரமுகா்கள் பேசினா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க