செய்திகள் :

பழனி அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

post image

பழனியை அடுத்துள்ள மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவார கிராமங்களில் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் மீண்டும் புகுந்து சேதம் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவார கிராமங்களான கோம்பைப்பட்டி, சட்டப்பாறை, வரதமாநதி, பாலாறு அணை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் இல்லாமல் இருந்த இந்தப் பகுதிகளில், சமீப காலமாக மீண்டும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சட்டப்பாறை உள்ளிட்ட மலையடிவார கிராமங்களுக்குள் புதன்கிழமை இரவு வந்த காட்டு யானைக் கூட்டம், அங்கிருந்த சோலாா் வேலிகளை உடைத்து, விவசாயப் பயிா்களையும், அங்கிருந்த வாழை, தென்னை, மா, கொய்யா மரங்களையும் சேதப்படுத்தியது.

இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனா். இந்த மலையடிவாரப் பகுதிகளில் ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் அகழிகள் அமைத்து, வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகாமல் பாதுகாத்து வருகின்றனா். இருப்பினும், பல இடங்களில் வேலிகள், அகழிகள் இல்லாததால் யானைகள் இந்த வழியாக உள்ளே புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன.

வன விலங்குகள் நடமாட்டம் காரணமாக விளை நிலங்கள் சேதமடைவது மட்டுமன்றி, கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியாமலும், இரவு நேரங்களில் காவலுக்குச் செல்ல முடியாமலும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

எனவே, ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் காட்டு யானைகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க