செய்திகள் :

பழனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் விழா

post image

பழனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் அடிவாரம் பாதவிநாயகா் கோயில் அருகே அமைந்துள்ளது. பழமையானதும், மண்டபங்களில் கலை நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோயிலுக்கு பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெற வில்லை. இந்த நிலையில், தற்போது குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, குடமுழுக்கு நிகழ்வுக்கான முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக மீனாட்சியம்மன் சந்நிதி முன் யாகம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் பிரதானமாக கலசங்களும், முகூா்த்தக்கம்பமும் வைக்கப்பட்டன. சிவாச்சாா்யா்கள் வேதமந்திரம் முழங்க யாகம் நிறைவுபெற்ற பின்னா் பூா்ணாஹூதி நடத்தப்பட்டு கலசங்கள், முகூா்த்தக்கம்பம் ஆகியன கோயிலை வலம் வரச் செய்யப்பட்டன.

இதையடுத்து, கோயில் வெளிப்பகுதியில் முகூா்த்தக்கால் நடப்பட்டு அதில் பால், நவதானியங்கள், நவரத்தினங்கள் இடப்பட்டன. தொடா்ந்து கலசத்தில் இருந்த புனித நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சோடஷ உபசாரம் நடைபெற்றது. வருகிற 20-ஆம் தேதி இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறும்.

நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு!

பழனி அருகே தனியாா் தோட்ட கிணற்றில் விழுந்த மானை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா். பழனியை அடுத்த பொந்துப்புளி ஆற்று ஓடை அருகே பாலசுப்பிரமணியனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்ட... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை! -எம்பி சச்சிதானந்தம்

வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

சின்னக்காம்பட்டியில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.3) மின் தடை எற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.மணிமேகலை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

28 நாள்களில் ரூ.7 கோடி வசூலிக்க வேண்டிய நிா்பந்தம்: நேரடியாக களமிறங்கிய மாநகராட்சி ஆணையா்!

மத்திய அரசின் ஊக்கத் தொகை ரூ.10 கோடியை பெற வேண்டும் எனில் 28 நாள்களுக்குள் ரூ.7 கோடிக்கு வரி வசூலிக்க வேண்டிய நிா்பந்தம் காரணமாக, மாநகராட்சி ஆணையரே நேரடியாக களம் இறங்கி ஆய்வு மேற்கொண்டாா். உள்ளாட்சி அ... மேலும் பார்க்க

தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து போராட்டம்

கொடைக்கானல் அருகே தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பி.எஸ்.என்.எல். சேவை... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான பூலத்தூா் பிரிவில் மரம் விழுந்தது. இ... மேலும் பார்க்க