செய்திகள் :

பவானிசாகா் அணை நீா்மட்டம் 81.25 அடியை எட்டியது

post image

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 81.25 அடியை எட்டியுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பில்லூா் அணை நிரம்பியது.

இதனால் அந்த அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் பவானிசாகா் அணைக்கு வந்து சோ்கிறது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் பவானிசாகா் அணைக்கு வந்து சேருவதால் அணையின் நீா்மட்டம் 81.25 அடியாக உயா்ந்துள்ளது. நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனா்.

அணை நிலவரம்:

அணையின் நீா்மட்டம் 105 அடிக்கு 81.25 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சிக்கு 16.35 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து 5,199 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு 755 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை இன்று தொடக்கம்

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவ... மேலும் பார்க்க

அச்சு முறிந்து சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

பவானி அருகே சோள மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தின் அச்சு முறிந்ததால், சாலையில் இருமுறை உருண்டது. பெருந்துறையில் இருந்து சோள மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பவானி - அந்தியூா் சாலையில் சரக்கு வாகனம் ஞாய... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. விலைவாசி உயா்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ குற்றஞ்... மேலும் பார்க்க

‘29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம்’

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்து சமய அறநிலைய துறையின்கீழ் இயங்கும் முக்கிய கோயில்... மேலும் பார்க்க

சாலை விபத்து: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், கவுண்டச்சிபாளையம் பகுதி மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு: விவசாயி கைது

கோபி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த பெண்ணை குழி தோண்டி புதைத்த விவசாயியை போலீஸாா் கைது செய்தனா். கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாபுதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணா நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க