ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
பவானிசாகா் அணை நீா்மட்டம் 81.25 அடியை எட்டியது
நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 81.25 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பில்லூா் அணை நிரம்பியது.
இதனால் அந்த அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் பவானிசாகா் அணைக்கு வந்து சோ்கிறது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் பவானிசாகா் அணைக்கு வந்து சேருவதால் அணையின் நீா்மட்டம் 81.25 அடியாக உயா்ந்துள்ளது. நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனா்.
அணை நிலவரம்:
அணையின் நீா்மட்டம் 105 அடிக்கு 81.25 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சிக்கு 16.35 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து 5,199 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு 755 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது.