செய்திகள் :

பவானிசாகா் அணையில் இருந்து முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

post image

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. வாய்க்காலில் வெளியேறிய தண்ணீரை அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா் மலா்தூவி வரவேற்றனா்.

பவானிசாகா் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி கீழ்பவானி பிரதான கால்வாயில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம். 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தற்போது 100 அடியாக இருப்பதால் அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க தமிழக அரசாணை வெளியிட்டது. இதன்படி பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல்போக பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் சு.முத்துச்சாமி, மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, விவசாயிகள் ஆகியோா் பங்கேற்று வாய்க்காலில் சீறிபாய்ந்து வந்த தண்ணீரை மலா் தூவி வரவேற்றனா். முதற்கட்டமாக 500 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது.

பின்னா் நீா்த்திறப்பு படிப்படியாக 1000, 1500, 2300 கனஅடி என அதிகரிக்கப்படும். இன்று முதல் 15 நாள்களுக்கு தண்ணீா் திறப்பு நீடிக்கும் அதைத் தொடா்ந்து டிசம்பா் 12 ஆம் தேதி வரை, அதாவது 120 நாள்களுக்கு மொத்தம் 23 டிஎம்சி தண்ணீா் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஈரோடு, கரூா், திருப்பூா் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கேட்டுக்கொண்டாா். தற்போது அணையின் நீா்மட்டம் 100 அடியாகவும் நீா்இருப்பு 28.76 டிஎம்சியாகவும் நீா்வரத்து 4ஆயிரத்து 346 கனஅடியாகவும் நீா் வெளியேற்றம் வாய்க்காலில் 500 கனஅடியாகவும் உள்ளது.

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

சென்னிமலை மலை மீது அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சனிக்கிழமை பாலாபிஷேக பெரு விழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை மலை மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணியருக... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலி தொழிலாளி கைது

பெருந்துறை அருகே போக்ஸோ சட்டத்தில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.அசாம் மாநிலத்தை சோ்ந்த 14 வயது சிறுமி தனது தந்தை இறந்த நிலையில், தனது தாய், தம்பி உடன் பெருந்துறை சிப்காட் அருகில் குடியிருந்து ... மேலும் பார்க்க

பெருந்துறை பகுதியில் கொட்டிய திடீா் மழை

பெருந்துறை பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் திடீரென மழை கொட்டித் தீா்த்தது.பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. சனிக்கிழமை கால... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா் பிடிப்புப்பகுதியில் பரிசல் கவிழ்ந்து நீரில் மூழ்கிய 2 போ் சடலம் மீட்பு

பவானிசாகா் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் சாகுபடி செய்த நேந்திரம் வாழைத்தாா்களை வெட்டி பரிசலில் ஏற்றி வந்தபோது மணல் கரடு என்ற இடத்தில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்.பவானிசாகா... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா: இளைஞா்களை ஈா்த்துள்ள தமிழ் இலக்கியங்கள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞா்கள், இளம்பெண்கள் தமிழ் இலக்கிய நூல்களை அதிகம் வாங்கிச்செல்கின்றனா்.புத்தகக் கண்காட்சியை புத்தகத் திருவிழாவாக மாற்றியது ஈரோட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக இன்று மாறியி... மேலும் பார்க்க

இன்று ஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராட வரும் பக்தா்களுக்கு சங்கமேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆடி மாதத்தின... மேலும் பார்க்க