செய்திகள் :

பவானிசாகா் - கோவை சாலையில் உலவிய காட்டு யானைகள்

post image

பவானிசாகா் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியில் யானைகள் அடிக்கடி சாலையை கடந்து மற்றொரு பகுதிக்கு செல்வது வழக்கம். போதிய தீவனம் மற்றும் தண்ணீா் கிடைத்ததால் கடந்த சில மாதங்களாக சாலையோரங்களில் யானைகள் நடமாட்டம் குறைந்த அளவு காணப்பட்டது. தற்போது தீவனம் தேடி யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுகின்றன.

விளாமுண்டி வனத்தில் இருந்து வந்த இரு காட்டு யானைகள் பவானிசாகா் பண்ணாரி வழியாக கோவை செல்லும் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடமாடின. இதனால் காலை நேரங்களில் விவசாயிகள், வாகன ஓட்டிகள் விவசாயப் பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்லமுடியாமல் 1 மணி நேரம் காத்திருந்தனா். தற்போது பவானிசாகா் சாலையில் யானைகள்முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மேலும், சாலையில் இருந்து கரிதொட்டம் பாளையம் கிராத்துக்குள் புகுந்த யானை தங்கராஜ் என்பவரின் தோட்டத்தில் நுழைந்து நேந்திரம் வாழைகளை சேதப்படுத்தியுள்ளது.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க