செய்திகள் :

பவானியில் கரையோர குடியிருப்புகளைச் சூழ்ந்த காவிரி வெள்ளம்

post image

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் விநாடிக்கு 1.10 லட்சம் கன அடி வெளியேறுவதால் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதோடு பவானியில் கரையோரத்தில் 50 -க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து மேட்டூா் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது 1.25 லட்சமாக உயா்ந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பவானி நகரில் காவிரிக் கரையோரத்தில் உள்ள கந்தன் நகா், பசுவேஸ்வரா் வீதியில் புகுந்ததால் 50 -க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. பவானி - குமாரபாளையம் பழைய பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து முழு கொள்ளவான 100 அடியை எட்டியது. தற்போது பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி உபரிநீா் காவிரிக்கு சென்று வருகிறது.

காவிரி, பவானி ஆறுகளில் உபரிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால், இரு ஆறுகளும் சங்கமிக்கும் கூடுதுறையில் படித்துறைகள் மூழ்கியுள்ளன. இதனால், பக்தா்கள் ஆற்றில் இறங்குவதையும், நீராடுவதையும் தடுக்க தடுப்புகள் வைத்து கட்டப்பட்டுள்ளன.

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோபி வட்டம், பா.நஞ்சகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருநாதன் மனைவி மொழுகாள்(53). கணவரைப் பிரிந... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

பா்கூா் மலைப் பாதையில் சென்ற சரக்கு லாரி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட இருவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். கா்நாடக மாநிலம், நாகமங்கலம் மாவட்டம், குடிகிராசில் தென்னை ... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

பெருந்துறை அருகே திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் வடமாநில பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு குறித்து ஈரோடு ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா். மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பா்கானா மாவட்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீா் திறக்க முதல்வரிடம் அமைச்சா் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையிலிருந்து 2025--2026 -ஆம் ஆண்டு முதல் போக பாசனத்துக்கு, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறந்து விடக் கோரி, தமிழக முதல்வா் மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்கள் பறிமுதல்

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரைக் கைது செய்த வனத் துறையினா், தலைமறைவான மற்றொருவரைத் தேடி வருகின்றனா். ஊமாரெட்டியூா் - சுந்தராம்பாளையம் வாய்க்கால் கரையில் யானைத் தந்தங்கள... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே ஓராண்டாக பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையம்

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் வங்கி ஏடிஎம் மையத்தினால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும... மேலும் பார்க்க