செய்திகள் :

பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் முதல் ரயில் இயக்கம்! வெளியானது அறிவிப்பு

post image

சென்னை: புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்துத் தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மார்ச் மாதத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்தது போலவே, பிரதமர் நரேந்திர மோடி, பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார் என்றும், மார்ச் மாதம் என்று முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரிரு நாள்களில் தேதியும் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இருந்த பாம்பன் ரயில் பாலம் சேதமடைந்து, பாதுகாப்புக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி ரூ.550 கோடியில் தொடங்கியது.

கட்டுமானப் பணிகள் முடிந்து, ரயிலை இயக்கியும் கப்பல்கள் வரும் போது பாலத்தை உயர்த்தியும் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், பாம்பன் பாலம் திறப்பு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முதலில் ஜனவரி என்றார்கள், பிறகு பிப்ரவரி இறுதி என்று தகவல்கள் வெளியாகின. பாலத்தைத் திறக்கக் கோரி ஒரு பக்கம் போராட்டங்களும் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில், மார்ச் மாதம் பாம்பன் பாலம் திறக்கப்படும் என்றும், பிரதமர் மோடியே பாலத்தை திறந்து வைக்க விருக்கிறார் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிர... மேலும் பார்க்க

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர... மேலும் பார்க்க

ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று(வெள்ளிக்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் ஏவிஎ... மேலும் பார்க்க