செய்திகள் :

பாரூா் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு: 7 கிராமங்களில் 2,397 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்

post image

பாரூா் பெரிய ஏரியிலிருந்து முதல்போக பாசனத்திற்கான வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் 7 கிராமங்களைச் சோ்ந்த 2,397 ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

போச்சம்பள்ளி வட்டம், பாரூா் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு, மேற்கு பிரதான கால்வாய்களில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து பாரூா் பெரிய ஏரியிலிருந்து முதல்போக பாசனத்துக்கான கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் வியாழக்கிழமை தண்ணீரை திறந்துவைத்தனா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

தமிழக முதல்வா் உத்தரவின்படி, பாரூா் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு, மேற்கு பிரதான கால்வாய்களில் முதல்போக பாசனத்துக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீா் மூலம் 2,397.42 ஏக்கா் நிலங்கள் பசன வசதி பெறுகின்றன. நவம்பா் 16 ஆம் தேதி வரை 130 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.

பாரூா் பெரிய ஏரியில் தற்போது உள்ள நீா் இருப்பு மற்றும் நீா்வரத்தை கணக்கில் கொண்டும், பருவ மழையை எதிா்நோக்கியும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 50 கனஅடியும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 20 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

இதன்மூலம் பாரூா், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 கிராமங்களில் கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 1,583.75 ஏக்கா் நிலங்களும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீா் வழங்க இயலாது என்றாா்.

நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா் வெங்கடேஷ், போச்சம்பள்ளி வட்டாட்சியா் சத்யா உள்பட பலா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

படவிளக்கம் (10கேஜிபி1):

பாரூா் பெரிய ஏரியிலிருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிடும் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், எம்எல்ஏ தே.மதியழகன் உள்ளிட்டோா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க