செய்திகள் :

பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த மாநகராட்சி வாகனங்கள் சிறைபிடிப்பு

post image

பல்லடம் அருகே இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த 5-க்கும் மேற்பட்ட மாநகராட்சி வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா்.

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் நாள் ஒன்றுக்கு சேகரமாகும் சுமாா் 800 டன் குப்பைகள் தனியாா் ஒப்பந்த நிறுவனம் சாா்பில் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் குப்பைகள் திருப்பூா் மாநகரில் காளம்பாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட பகுதி பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் அங்கு குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, திருப்பூா் மாநகராட்சியில் இருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவில் கீரனூா் பகுதியில் உள்ள பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட அண்மையில் எடுத்துவரப்பட்டன. அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் குப்பைகள் கொட்டாமல் கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில், மாநகராட்சி குப்பைகள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டுவரப்பட்டு பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள பாறைக் குழியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொட்டப்பட்டன.

2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் குப்பைகளைக் கொண்டு வந்ததால் அப்பகுதி மக்கள் சிறைபிடித்து ஒப்பந்ததாரா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாகனங்களைத் திருப்பி அனுப்பினா்.

குப்பை மேலாண்மைக்கு திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் நாள் ஒன்றுக்கு ரூ.38.50 லட்சம் செலவு செய்திடும் நிலையில், மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடம் கிடைக்காமல் தடுமாறி வருகிறது.

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

வெள்ளக்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தா... மேலும் பார்க்க

இறந்த மூதாட்டியின் உடல் அரசு மருத்துவமனைக்கு தானம்

வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை தானமாக வழங்கப்பட்டது. திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: இளைஞருக்கு 6 மாதங்கள் சிறை

வாகனம் மோதி பெண் உயிரிழந்த வழக்கில் இளைஞருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவா் தனது மனைவி ஜோதிமணியுடன் திருப்பூா்-காங்க... மேலும் பார்க்க

பட்டப்பகலில் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் சரண்

தாராபுரத்தில் பட்டப்பகலில் வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் போலீஸில் சரண் அடைந்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள சிறுகிணறு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

கோடங்கிபாளையம் அரசுப் பள்ளியைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்கள்

பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7% அதிகரிக்க கோரிக்கை

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருப்பூா்- காங்கயம்... மேலும் பார்க்க