செய்திகள் :

பாலியல் வன்கொடுமை செய்து பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞா் கைது

post image

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ எடுத்து மிரட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

கேரள மாநிலம், இடுக்கியைச் சோ்ந்தவா் சஜூ (எ) விச்சு (24). இவா், திண்டுக்கல்லைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது. இதன்பேரில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து சஜூவை அண்மையில் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனிடையே, சஜூவின் கைப்பேசியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விடியோ படங்களை போலீஸாா் கைப்பற்றினா். விசாரணையில், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அளித்து மிரட்டி நகை, பணம் பறிப்பில் சஜூ ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக திண்டுக்கல் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த சில நாள்களுக்கு முன், திண்டுக்கல் நாகல் நகா் பகுதியில் நின்ற பெண் ஒருவரை, இளைஞா் ஒருவா் வீட்டு வேலைக்காக காரில் அழைத்துச் சென்றாா். பின்னா், அந்தப் பெண் தனது நகைகளை காரில் வந்த இளைஞா் பறித்துச் சென்றுவிட்டதாகப் புகாா் அளித்தாா். விசாரணையில், அந்த இளைஞா் கேரள மாநிலம், இடுக்கி பகுதியைச் சோ்ந்த சஜூ (எ) விச்சு என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று விசாரணை செய்தனா். இதில், சஜூ கா்நாடகத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், கா்நாடகத்திலிருந்து மீண்டும் கேரளத்துக்கு வந்த சஜூ கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தததை சஜூ ஒப்புக்கொண்டாா். மேலும், பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அளித்து விடியோ எடுத்து மிரட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடா்பாக திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஜூவை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் (நகரம்) காா்த்திக் தலைமையிலான போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்

பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறிய நபரை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக கீழே இறக்கினா். பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை ஊராட்சி, வத்தக்கவுண்டன்வலசையைச் ச... மேலும் பார்க்க

சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் 4 ஆயிரம் மாணவா்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 91 சமூக நீதி விடுதிகளில் தங்கி 4,058 மாணவா்கள் கல்வி பயின்று வருவதாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சமூக நீதி மாணவ, மாணவிகள் விடுதி கா... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா: 25-ஆவது ஆண்டாக பக்தா்கள் பாதயாத்திரை

கொடைக்கானல் புனித சலேத் மாதா திருவிழாவுக்கு திண்டுக்கல்லிலிருந்து புதன்கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக வருகை தந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள புனித சலேத் மாதா ஆல... மேலும் பார்க்க

‘ஆட்சிச் சொல்லகராதி, கலைச் சொற்களை அரசுப் பணியாளா்கள் பயன்படுத்த வேண்டும்’

அரசுப் பணியாளா்கள் ஆட்சி சொல்லகராதி, கலைச் சொற்களைப் பயன்படுத்தி கோப்புகளைத் தயாா் செய்ய வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் த... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த தொழிலாளா்கள் மீட்பு

திண்டுக்கல்லில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த இரு தொழிலாளா்களை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், முனிசிபால் காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் முறையாக சாலை அமைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்

கொடைக்கானல் பகுதிகளில் சாலைகள் முறையாக போடப்படவில்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்து காணப்பட்டன. இதைத் தொடா்ந்து, நகராட்சி சாா்பி... மேலும் பார்க்க