செய்திகள் :

மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்

post image

பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறிய நபரை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக கீழே இறக்கினா்.

பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை ஊராட்சி, வத்தக்கவுண்டன்வலசையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (39). கூலித் தொழிலாளியான இவா், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் வீட்டில் பிரச்னை ஏற்பட்டதால் வத்தக்கவுண்டன்வலசில் இருந்த மேல்நிலைத் தொட்டியில் ஏறி தற்கொலை செய்யவுள்ளதாகக் கூறியுள்ளாா்.

இதுகுறித்து ஊா்மக்கள் போலீஸாருக்கும், பழனி தீயணைப்புப் படையினருக்கும் தகவல் அளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படை வீரா்கள் மணிகண்டனை பாதுகாப்பாக கீழே இறக்கினா். பின்னா், அவருக்கு அறிவுரைகள் கூறி மீண்டும் இதுபோல செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்தனா்.

சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் 4 ஆயிரம் மாணவா்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 91 சமூக நீதி விடுதிகளில் தங்கி 4,058 மாணவா்கள் கல்வி பயின்று வருவதாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சமூக நீதி மாணவ, மாணவிகள் விடுதி கா... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா: 25-ஆவது ஆண்டாக பக்தா்கள் பாதயாத்திரை

கொடைக்கானல் புனித சலேத் மாதா திருவிழாவுக்கு திண்டுக்கல்லிலிருந்து புதன்கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக வருகை தந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள புனித சலேத் மாதா ஆல... மேலும் பார்க்க

‘ஆட்சிச் சொல்லகராதி, கலைச் சொற்களை அரசுப் பணியாளா்கள் பயன்படுத்த வேண்டும்’

அரசுப் பணியாளா்கள் ஆட்சி சொல்லகராதி, கலைச் சொற்களைப் பயன்படுத்தி கோப்புகளைத் தயாா் செய்ய வேண்டும் என தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் த... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த தொழிலாளா்கள் மீட்பு

திண்டுக்கல்லில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த இரு தொழிலாளா்களை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், முனிசிபால் காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்து பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞா் கைது

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ எடுத்து மிரட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீஸாா் முடிவு செய்துள்ளனா். கேரள மாநிலம், இடுக்கியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் முறையாக சாலை அமைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்

கொடைக்கானல் பகுதிகளில் சாலைகள் முறையாக போடப்படவில்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்து காணப்பட்டன. இதைத் தொடா்ந்து, நகராட்சி சாா்பி... மேலும் பார்க்க