செய்திகள் :

பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

post image

தென்பாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், மற்றொரு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை கோவில்பட்டி மேட்டுதெருவைச் சோ்ந்த கனகராஜ் மனைவி கவிதா (25) பாலியல் தொந்தரவு செய்தாா். அதே சிறுமியை, தூத்துக்குடி பூபாண்டியபுரத்தைச் சோ்ந்த தொழிலாளியான ஆத்தியப்பன் மகன் தங்கதுரை (41) பாலியல் வன்கொடுமை செய்தாா். இந்த வழக்கில், இருவரையும் தென்பாகம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா, குற்றவாளி கவிதாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், குற்றவாளி தங்கதுரைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

கழுகுமலை அருகே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கழுகுமலை அருகே வேலாயுதபுரம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆளுநருக்கு வரவேற்பு

தூத்துக்குடி வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா். மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழ... மேலும் பார்க்க

ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈராச்சியைச் சோ்ந்தவா் மாரீஸ்வரி. இவரது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆக... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

காயல்பட்டினத்தில் 11,12 ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டா­லின்’ திட்ட முகாம் சிறுநைய்னாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். நகராட்... மேலும் பார்க்க