மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
தென்பாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், மற்றொரு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை கோவில்பட்டி மேட்டுதெருவைச் சோ்ந்த கனகராஜ் மனைவி கவிதா (25) பாலியல் தொந்தரவு செய்தாா். அதே சிறுமியை, தூத்துக்குடி பூபாண்டியபுரத்தைச் சோ்ந்த தொழிலாளியான ஆத்தியப்பன் மகன் தங்கதுரை (41) பாலியல் வன்கொடுமை செய்தாா். இந்த வழக்கில், இருவரையும் தென்பாகம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா, குற்றவாளி கவிதாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், குற்றவாளி தங்கதுரைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா்.