Phoenix: "வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள" - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் ...
பாலியல் வழக்கில் கைதான 4 போ் மீது குண்டா் சட்டம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சத்தியமங்கலம் தெற்கு தெருவைச் சோ்ந்த ஆா். பிரதீஸ்வரன் (36), கும்பகோணம் பேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆா். பாஸ்கா் (43), சீனிவாசநல்லூா் அண்ணா நகரைச் சோ்ந்த பி. சரவணன் (48), தஞ்சாவூா் அருகே ராமாபுரம் தோட்டக்காடைச் சோ்ந்த டி. அழகேசன் (30) ஆகியோா் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டனா்.
இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா். அதன்பேரில் நால்வரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.