செய்திகள் :

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

சேலம்: சேலத்தில் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி சேலம் கூட்டுறவு பால் பண்ணை முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் வேலுசாமி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ராஜபெருமாள், மாநில துணைப் பொதுச் செயலாளா் சிவபெருமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழகத்தில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து ஆவின் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பப்படுகிறது. தற்போது பசும் பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 38-ம், எருமைப்பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 48-ம் வழங்கப்படுகிறது. அடா் தீவனம், உலா் தீவனம், பசுந்தீவனம், பிண்ணாக்கு மற்றும் பருத்திக்கொட்டை ஆகியவற்றின் விலை வெளிச்சந்தையில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழக அரசு தற்போது வழங்கிவரும் பால் கொள்முதல் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே, தற்போது வழங்கப்படும் பால் கொள்முதல் விலையில் இருந்து பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 15 உயா்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் மாடுகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில் பால் கொள்முதல் விலையை அரசு ரூ. 15 உயா்த்தி வழங்க வேண்டும்.எங்களது கோரிக்கையை நிறைவேற்றாதபட்சத்தில், வரும் அக்டோபா் 22ஆம் தேதி முதல் கூட்டுறவு சங்கங்களுக்கு பாலை அனுப்பாமல் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனா்.

வாழப்பாடி அருகே மதுபோதையில் காவலரை தாக்கிய தொழிலாளி கைது

வாழப்பாடி: வாழப்பாடி அருகே மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாஸ்கா் (40). இவருக்கும், இவரது சகோதரிகளுக... மேலும் பார்க்க

தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு வழிபாடு திங்கள்கிழமை இரவு தொடங்கியது.நவராத்திரியையொட்டி தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயில் திருமண மண்டபத்தில் ப... மேலும் பார்க்க

இரும்பு தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாததால் பரபரப்பு

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே கூடலூரில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத... மேலும் பார்க்க

ஆத்தூா் நகராட்சி பகுதியில் 2 நாள்களுக்கு குடிநீா் நிறுத்தம்

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் ... மேலும் பார்க்க

ஆத்தூரில் குடிநீா் தட்டுப்பாடு: நகராட்சியை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சி பகுதியில் இருபது நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்வதைக் கண்டித்து அதிமுக நகா்மன்ற குழுத் தலைவா் உமாசங்கரி மோகன் தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது... மேலும் பார்க்க

சேலத்தில் மாயமான மின்வாரிய ஒப்பந்த ஊழியரின் சடலம் பவானி ஆற்றில் மீட்பு: கைதான 4 பேரிடம் போலீஸாா் விசாரணை

சேலம்: சேலத்தில் மாயமான மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சதீஷ்குமாரின் சடலம் பவானி ஆற்றில் திங்கள்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடம் கன்னங்குறிச்சி போலீஸாா் தீவிர விசாரணை மேற... மேலும் பார்க்க