பா்கூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
பா்கூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியை எம்எல்ஏ தே.மதியழகன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பா்கூா் பேரூராட்சியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசியதாவது:
போதைப் பொருள் ஒழிப்பை மக்கள் இயக்கமாக நாம் முன்னெடுக்க வேண்டும். போதைப் பொருள் ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
விழிப்புணா்வு பேரணி கன்காா்டியா அரசு உதவி பெறும் பள்ளியில் தொடங்கி பா்கூா் பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. கன்காா்டியா அரசு உதவி பெறும் பள்ளி, பா்கூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திமுகவினா், பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா். அதைத் தொடா்ந்து போதைப் பொருள் எதிா்ப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.