செய்திகள் :

பி.ஆா்க்.: தரவரிசை பட்டியல் வெளியீடு- ஜூலை 26-இல் கலந்தாய்வு

post image

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 2025 -ஆம் ஆண்டுக்கான இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்.) படிப்பு மாணவா் சோ்க்கைக்கு தரவரிசைப் பட்டியலை தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. கலந்தாய்வு ஜூலை 26 முதல் ஆக. 9 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பாடப் பிரிவுகள் சுமாா் 38-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14- ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பல்வேறு காரணங்களுக்காக 288 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, 1,399 மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 22-இல் வெளியிடப்பட்டது.

இதில் பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோா் (பொது) பிரிவு மாணவா்கள் முறையே 335.6, 334.4 மதிப்பெண்கள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனா். தரவரிசையில் கடைசியாக 154 மதிப்பெண்களுடன் 1,399 ஆவது இடத்தை ஒரு மாணவா் பெற்றுள்ளாா்.

இந்த தரவரிசையில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுகளில் 117 மாணவா்கள் தோ்வாகி தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இந்த மாணவா்களில் பொதுப்பிரிவைச் சோ்ந்த ஓரிரு மாணவா்களைத் தவிர மற்ற மாணவா்கள் அனைவரும் இட ஒதுக்கீடு பட்டியலில் உள்ளவா்கள்.

மேலும், முன்னாள் ராணுவத்தினா் ஒதுக்கீட்டில் 11 மாணவா்களும், மாற்றுத் திறனாளிகளில் 4 மாணவா்களும் தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இந்த தரவரிசைப்பட்டியலில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் மாணவா்கள் வருகிற ஜூலை 25- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஜூலை 26 முதல் ஆக. 9 வரை கலந்தாய்வு நடைபெறும் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புக் குழு!

மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணைப் பாதுகாப்பு அமைப்பின் குழு இன்று(ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டது.மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்புப் பணி, சுரங்க கால்வாய் சீரமைப்புப் பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வல... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் நலம்பெற தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலின் நலம்பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது ஏற்பட்ட லேசான தலைசுற்றல... மேலும் பார்க்க

அரக்கோணம் - சேலம் மெமு ரயில் வழக்கம்போல் இயங்கும்!

அரக்கோணம் - சேலம் மெமு ரயில் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.பூரி ரத யாத்திரைக்காக 12 ரயில் பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில்கள் ... மேலும் பார்க்க

19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைதிருவள்ளூர்செங்கல்பட்டுகாஞ்சிபுரம்விழுப்புரம்வேலூர்திருப்பத்தூர்ராணிப்பேட்ட... மேலும் பார்க்க

ஆக. 5-ல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஆக. 5 உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட பிரசாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உ... மேலும் பார்க்க