செய்திகள் :

பி.ஆா்க்.: தரவரிசை பட்டியல் வெளியீடு- ஜூலை 26-இல் கலந்தாய்வு

post image

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 2025 -ஆம் ஆண்டுக்கான இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்.) படிப்பு மாணவா் சோ்க்கைக்கு தரவரிசைப் பட்டியலை தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. கலந்தாய்வு ஜூலை 26 முதல் ஆக. 9 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பாடப் பிரிவுகள் சுமாா் 38-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14- ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பல்வேறு காரணங்களுக்காக 288 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, 1,399 மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 22-இல் வெளியிடப்பட்டது.

இதில் பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோா் (பொது) பிரிவு மாணவா்கள் முறையே 335.6, 334.4 மதிப்பெண்கள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனா். தரவரிசையில் கடைசியாக 154 மதிப்பெண்களுடன் 1,399 ஆவது இடத்தை ஒரு மாணவா் பெற்றுள்ளாா்.

இந்த தரவரிசையில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுகளில் 117 மாணவா்கள் தோ்வாகி தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இந்த மாணவா்களில் பொதுப்பிரிவைச் சோ்ந்த ஓரிரு மாணவா்களைத் தவிர மற்ற மாணவா்கள் அனைவரும் இட ஒதுக்கீடு பட்டியலில் உள்ளவா்கள்.

மேலும், முன்னாள் ராணுவத்தினா் ஒதுக்கீட்டில் 11 மாணவா்களும், மாற்றுத் திறனாளிகளில் 4 மாணவா்களும் தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இந்த தரவரிசைப்பட்டியலில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் மாணவா்கள் வருகிற ஜூலை 25- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஜூலை 26 முதல் ஆக. 9 வரை கலந்தாய்வு நடைபெறும் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • நேற்று (24-07-2025) காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு... மேலும் பார்க்க

நலம் தரும் ஸ்டாலின் திட்டம்: ஆக. 2-ல் முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

நலம் தரும் ஸ்டாலின் என்ற திட்டத்தை வரும் ஆக. 2 ஆம் தேதி சாந்தோம் பள்ளி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூலை 25) தெரிவித்துள்ளது.வடக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்!!

திமுக ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு ஒன்றை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். உருட்டுகளும் திருட்டுகளும் என்ற பெயரில் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில், திமுக ஆட்சியை... மேலும் பார்க்க

கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவியேற்பு!

கமல்ஹாசன் உள்பட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினராக தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் திமுகவைச் சேர்ந்த பி. வில்சன், கவிஞர் ராஜாத்தி... மேலும் பார்க்க