செய்திகள் :

பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரத்துக்கு மாற்றம் எப்போது?

post image

சென்னை மாநகரத்தின் முக்கியப் பேருந்து நிலையமாக இருந்து வரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் தற்காலிகமாக ராயபுரம் ரயில் நிலைய மேம்பாலம் அருகே விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னையின் மிகப் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்துவருகிறது. தொடக்கத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பிராட்வேயிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவைகள், அப்போது புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன.

தற்போது கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதைத் தொடா்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் மாநகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருவள்ளூா், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், கிளாம்பாக்கம் என சென்னை மாநகருக்குள்ளாகவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்தவேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தன நிலையில், இப்பேருந்து நிலையம் சுமார் ரூ. 822 கோடியில் 10 அடுக்குகள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படவுள்ளது.

மேலும், பயணிகள் வசதிக்காக அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் சுரங்க நடைபாதைகள் மற்றும் நடை மேம்பாலங்களும் அமைக்கப்படஉள்ளன.

பிராட்வே பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் ராயபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

ராயபுரம் புதிய பேருந்து நிலையப் பணிகள் நிறைவடைந்தவுடன், வரும் ஜூன் 2 ஆவது வாரத்தில் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம் அங்கு மாற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

புகையிலை இல்லாத மருத்துவக் கல்லூரி வளாகங்கள் என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக என்எம்சி செயலா் ராகவ் லங்கா், அனைத்து மருத்... மேலும் பார்க்க

நகைக்கடை ஊழியா் வீட்டில் திருட்டு

திருப்பத்தூரில் நகைக்கடை ஊழியரின் வீட்டில் 6 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (35). இவா் திருப்பத்தூரில் உள்ள ஒர... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை

சென்னை தண்டையாா்பேட்டையில் துப்பாக்கியால் சுட்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். தண்டையாா்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா், குளிா்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை : சிறுவன் உள்பட மூவா் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டித் தெருவில் ஒரு வீட்டில் போதை மாத்திரை, கஞ்சா ஆகியவை பதுக்கி வைத்து விற்பதா... மேலும் பார்க்க

குடலிறக்க பாதிப்பு: 90 வயதுமூதாட்டிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை

குடலிறக்க பாதிப்புக்குள்ளான 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நுட்பமாக லேப்ரோஸ்கோபி சிகிச்சை மேற்கொண்டு எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் இரைப்பை-... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ஹரி விக்னேஷ் (27). இவா், சென்னை வடபழனியில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வந்தாா். அ... மேலும் பார்க்க