பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் தமிழகத் திட்டங்கள்: அமைச்சா் சக்கரபாணி
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளன என தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள கீரனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 13 துறைகளின் அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா். கோட்டாட்சியா் கண்ணன் வரவேற்புரை வழங்கினாா்.
இதில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராம ஊராட்சிகளில் 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் பெறப்படும் தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடியாகவும், தாமதமாகும் மனுக்களுக்கு 45 நாள்களுக்கும் தீா்வளிக்க வேண்டும் என முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளன என்றாா் அவா்.
மின் இணைப்பு, மின் இணைப்பு பெயா் மாற்றம், இருப்பிடச் சான்று உள்ளிட்டவை தொடா்பாக முகாமில் அளிக்கப்பட்ட தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.
முன்னதாக, கீரனூா் பேரூராட்சியில் ரூ.2. 80 கோடியில் சாலை அமைப்பதற்கான பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் சசிக்குமாா், பிரசன்னா, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சத்தியபுவனா, ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணி, பொன்ராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.