செய்திகள் :

பிளாஸ்டிக் ஸ்டூல்களில் நடுவே இருக்கும் துளை - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் தெரியுமா?

post image

பொதுவாக கடைகளில் வீடுகளில் பிளாஸ்டிக் ஸ்டூல்கள், சேர்கள் பார்த்திருப்போம். அந்த ஸ்டூல்களில் நடுவில் துளை இருப்பதை கவனத்திருப்போம். இது அழகுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஸ்டூல்களில், நாற்காலிகளில் இருக்கும் துளைக்கு பின்னால் சில அறிவியல் காரணங்கள் உள்ளன என்பது குறித்து தெரியுமா?

பிரபலமான பிராண்டுகளாக இருந்தாலும் சரி உள்ளூர் தொழிற்சாலையாக இருந்தாலும் சரி சில உற்பத்தி பொருட்களில் அறிவியல் விதிகளை பின்பற்றுவர். அதன்படி தான் ஸ்டூல்களில் இருக்கும் துளைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஸ்டூல்களின் நடுவில் இருக்கும் துளை அதன் நிலைத்தன்மைக்காக வடிவமைக்கப்படுகிறது.

ஸ்டூல்களின் மீது அமரும் போது, சமநிலை இல்லாமல் உடைந்து கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த துளைகள் போடப்படுகின்றன.

இந்த துளைகள் பெரும்பாலும் வட்ட வடிவில் தான் இருக்கின்றன. சதுரமாகவோ அல்லது மற்ற வடிவத்திலோ இருந்தால், நாம் அமரும் போது அழுத்தம் அதிகரிக்கலாம்.

இதனால் இந்த ஸ்டூல்களில் விரிசல்கள் விழலாம். வட்டவடிவ துளைகள் இருந்தால் நாம் அமரும் போது பேலன்ஸ் இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்டூல்களை நாம் ஒன்றன் மீது ஒன்றாக தான் அடுக்குவோம். நடுவில் இந்த துளைகள் இல்லையென்றால், பிரிப்பது கடினமாகிவிடும். மேலும் ஒரு ஸ்டூலுக்கும், அடுத்த ஸ்டூலுக்கும் இடையில் காற்றழுத்தம் அதிகரித்துவிடும். இந்த துளைகள் இருந்தால், ஸ்டூகளை எளிதாக பிரிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Infant trafficking: மகப்பேறு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை எப்படித் தடுக்கிறார்கள்?!

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக, மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் திருடப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்த... மேலும் பார்க்க

"தந்தை யார் என்று சொல்லக் கூடாது...” - வாடகை தாயின் வாயை அடைக்க பணம் கொடுக்கிறாரா எலான் மஸ்க்?

உலக பணக்காரரான எலான் மஸ்க், வாடகை தாய் மூலம் பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அதனை ரகசியமாக நிர்வகிக்க ஊக்கத்தொகைகள் கொடுப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தனி... மேலும் பார்க்க

UP : `வருங்கால மருமகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியது ஏன்?’ - விசாரணையில் பெண் சொன்னதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த சப்னா என்ற பெண்ணின் மகளுக்கு ராகுல் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், சப்னா தனது வருங்க... மேலும் பார்க்க

Scuba Diving: ``நீருக்குள் சந்தித்தோம், அதனால்..'' - நீருக்கடியில் திருமணம் செய்த காதல் தம்பதி!

வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பும் சில மணமக்கள், தங்களது திருமணங்களை தனித்துவமாக நடத்த முற்படுகின்றனர். அப்படி ஒரு காதல் ஜோடி நீருக்கடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.ப... மேலும் பார்க்க

தாராவி: `ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள், சட்டவிரோத குடியிருப்பாளர்கள்' - NMDPL அறிவிப்பால் அதிர்ச்சி

தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையம்ஆசியாவில் அதிக குடிசையுள்ள பகுதியாக பார்க்கப்படும் மும்பை தாராவியில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அதானி ந... மேலும் பார்க்க

இந்தியாவில் முதல் முறை: ஓடும் ரயிலில் ATM மெஷின்; அறிமுகம் செய்துள்ள மத்திய ரயில்வே

நாட்டில் இப்போது ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. பணத்தை நேரடியாகப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. ஆனாலும் சில இடங்களில் ரொக்க பணத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக ரயி... மேலும் பார்க்க