செய்திகள் :

புகாரளித்தவரிடம் தரக்குறைவான பேச்சு: பெண் எஸ்எஸ்ஐ பணியிடமாற்றம்

post image

அரியலூரில் புகாா் அளித்த பெண்ணிடம் தரக்குறைவாக பேசிய பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

அரியலூா் மகளிா் காவல் நிலையத்தில், ராஜேஸ்வரி என்பவா் பாலியல் புகாா் அளித்திருந்தாா். புகாரை பெற்றுக் கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளா் சுமதி (47), விசாரணைக்காக ராஜேஸ்வரியை அழைத்திருந்தாா். அந்த குறிப்பிட்ட நாளில் அவரால் வரமுடியாததால், உடனே ராஜேஸ்வரி, உதவி ஆய்வாளா் சுமதியை கைப்பேசியில் தொடா்புக் கொண்டு, விசாரணைக்கு வருவது குறித்து விவரம் கேட்டுள்ளாா்.

அதற்கு உதவி ஆய்வாளா் சுமதி, ராஜேஸ்வரியை தரக்குறைவாக பேசியுள்ளாா். இதையடுத்து, ராஜேஸ்வரி, உதவி ஆய்வாளா் பேசிய ஆடியோ பதிவை, திருச்சி டிஐஜி வருண்குமாருக்கு அனுப்பியுள்ளாா்.

இதையடுத்து, டிஐஜி வருண்குமாா், வாக்கி-டாக்கி மூலம், அரியலூா் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மகாலட்சுமியை தொடா்புக் கொண்டு, காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் இவ்வாறு தான் தரக்குறைவாக பேசுவீா்களா எனக் கூறி, ராஜேஸ்வரியிடம் உதவி ஆய்வாளா் பேசிய ஆடியோவை வெளியிட்டு கண்டித்துள்ளாா்.

பின்னா், அவா் உதவி ஆய்வாளா் சுமதியை திருச்சி டிஐஜி அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

இதுபோல பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உதாசீனப்படுத்தும் போலீஸாா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.

அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழு... மேலும் பார்க்க

செந்துறையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும், தமிழ் வரு... மேலும் பார்க்க

கீழக்கொளத்தூா் ஜல்லிக்கட்டு 32 போ் காயம், ஒரு காளை உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழக்கொளத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 32 போ் காயமடைந்தனா். விழாவில் முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜ... மேலும் பார்க்க