ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
புகையிலை பொருள்கள் விற்றதாக பெண் கைது
புதுக்கடை அருகே உள்ள முள்ளூா் துறை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
தேங்காய்ப்பட்டினம் முள்ளூா் துறை பகுதியைச் சோ்ந்த பங்கிராஜ் மனைவி செலின்(53). இவா், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட 18 பாக்கெட் புகையிலை பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து செலினை போலீஸாா் கைது செய்தனா்.