செய்திகள் :

'புதின் பைத்தியம்; ஜெலன்ஸ்கி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை' - இரு நாட்டு தலைவர்களிடமும் ட்ரம்ப் கடுமை

post image

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்த்தை அமெரிக்காவும், பற ஐரோப்பிய நாடுகளும் செய்துகொண்டு தான் வருகின்றன. பேச்சுவார்த்தையின் போதெல்லாம் 'ஓகே' சொல்லிவிட்டு, தங்களது நாட்டிற்கு சென்ற உடன் தாக்குதல், பதில் தாக்குதலை நடக்க தொடங்கிவிடுகின்றன இரு நாடுகளும்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"எனக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் எப்போதும் நல்ல உறவு இருந்துள்ளது. ஆனால், இப்போது அவருக்கு என்னவோ ஆகிவிட்டது. அவர் பைத்தியமாகிவிட்டார். அவர் தேவையில்லாமல் பல மக்களின் உயிர்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்... நான் ராணுவ வீரர்களை மட்டும் சொல்லவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஏவுகணைகளும், ட்ரோன்களும் எந்தக் காரணமும் இல்லாமல் உக்ரைன் நகரங்களின்மீது ஏவப்படுகின்றன.

அவருக்கு உக்ரைனின் ஒரு பகுதி மட்டுமே வேண்டாம்... உக்ரைனே வேண்டும் - இதை நான் முன்பிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

ஆனால், இதை மெய்ப்பிப்பது போல அவர் எதாவது செய்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

அதே மாதிரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அவர் பேசுவதுபோல, அவர் நாட்டிற்கு எதுவும் செய்வதில்லை. அவர் வாயில் வந்து விழும் அனைத்துமே பிரச்னையைத் தான் உருவாக்குகிறது. அது எனக்கு பிடிக்கவில்லை. இதை நிறுத்திவிடுவது நல்லது.

அப்போது நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், இந்தப் போரே தொடங்கி இருக்காது. இது ஜெலன்ஸ்கி, புதின், பைடனின் போர். ட்ரம்ப் உடையது அல்ல.

திறமையின்மை, வெறுப்பால் தொடங்கப்பட்ட பெரிய மற்றும் அழகற்ற தீயரி அணைக்க மட்டுமே நான் உதவுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

United Nations: நிதி நெருக்கடி... `கிட்டத்தட்ட 7,000 பேரை பணிநீக்கம் செய்கிறதா ஐக்கிய நாடுகள் சபை?'

நிதி நெருக்கடி காரணமாக, $3.7 பில்லியன் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பேரை பணியிலிருந்து நீக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம். ஐக்கிய நாடுகள் சபையின் நிதியில்... மேலும் பார்க்க

பாமக: "என் அம்மா மேல் துரும்பைக் கூடப் படவிடமாட்டேன்; ஆனால் இப்போது..." - அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாகவே, நேரிடையாகவும், மறைமுகமாகவும் வார்த்தை மோதல்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.இத்தகைய சூழலில், சோழிங்... மேலும் பார்க்க

'70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குவது தான் 'ஆயுஷ்மான் வயோ வந்தனா' திட்டம்.இதில் ஒரு கு... மேலும் பார்க்க

PMK: "எவ்வளவோ அபாண்டமான பழிகளைச் சுமந்திருக்கிறேன்" - நிர்வாகிகள் மத்தியின் அன்புமணி உருக்கம்

'அன்புமணி ஆலோசனை...'பனையூரில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி முடித்திருக்கிறார்.ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

DOGE-ல் இருந்து விலகிய மஸ்க்... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பில் விரிசலா; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

'அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே மனக்கசப்போ?' என்கிற கேள்வி நேற்று முன்தினத்தில் இருந்து உலகில் வட்டமடித்து வருகிறது.'ஒரு ஸ்ட்ரைட் ஆண் மற்றொரு ஆணை எவ்வளவு காதலிக்க முடியுமோ, அ... மேலும் பார்க்க