MK Stalin: `அநீதியில் கூட அரசியல் ஆதாயம்...' - அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மு...
புதுகை முத்தமிழ்ச் சங்கம் தொடக்க விழா
புதுகை முத்தமிழ்ச் சங்கம் தொடக்க விழா புதுக்கோட்டை நகா்மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவா் ஜெயா வேதாசலம் தலைமை வகித்தாா். கரூா் திருக்குறள் பேரவைச் செயலா் மேலை பழனியப்பன், குளித்தலை தமிழ்ப் பேரவைத் தலைவா் கடவூா் மணிமாறன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு பேசினா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 பொதுத்தோ்வுகளில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு இந்த விழாவில் ரொக்கப் பரிசு கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், சங்கத்தின் கௌரவத் தலைவா் பா. குமாரசாமி, செயலா் அ. உமாமகேஸ்வரி, துணைத் தலைவா்கள் கவி வெண்ணிலவன், அழ. கணேசன், துணைச் செயலா்கள் க.ச. ரவிச்சந்திரன், அ. சங்கீத்ராஜ், பொருளாளா் க. முத்துலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.