செய்திகள் :

புதுகையில் போராட்டங்கள் நடத்தப்படும் இடங்களை முறைப்படுத்த ஆலோசனை!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் போராட்டங்கள், கூட்டங்களை நடத்துவதற்கான இடங்களை மறுபரிசீலனை செய்வது தொடா்பான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு .அருணா தலைமை வகித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா முன்னிலை வகித்து, ஒவ்வொரு வருவாய்க் கோட்ட வாரியாக ஏற்கெனவே அனுமதிக்கப்படும் இடங்கள் குறித்து விளக்கினாா்.

இவற்றில் சா்ச்சைக்குரிய இடங்கள், பரிசீலனைக்குரிய இடங்கள் குறித்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து அடுத்தடுத்து நடைபெறும் கூட்டத்தில் இறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), ச. சிவகுமாா் (அறந்தாங்கி), அ. அக்பா்அலி (இலுப்பூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயப... மேலும் பார்க்க

ஆலங்குடியில் தனியாா் கல்லூரி பேருந்து கடத்தல்: அறந்தாங்கியில் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தனியாா் கல்லூரி பேருந்தை திங்கள்கிழமை மா்மநபா்கள் கடத்திச்சென்று டீசல் இல்லாததால் அறந்தாங்கியில் விட்டுச்சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆலங்குடியில் ... மேலும் பார்க்க

பொதுப்பணித் துறை அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றப் பணியாளா்கள்

பொதுப்பணித் துறை வாகனம் மோதிய விபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்காததை தொடா்ந்து, புதுகை பொதுப்பணித் துறை அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள்... மேலும் பார்க்க

நாா்த்தாமலை பூப்பிரித்தல்

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், அம்மன் மீது சாத்தப்பட்டு மலைபோல் குவிந்த பூக்களைப் பிரிக்கும் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண் தற்கொலைக்கு முயற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு திங்கள்கிழமை பெண் ஒருவா் தற்கொலைக்கு முயன்றாா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரபு-பொற்செல்வி ஆகிய... மேலும் பார்க்க

கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு எதிரான வலுவான போராட்டம் தேவை!

தற்போதுள்ள இந்தியக் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கான முயற்சியை முறியடிக்க வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலப் பொது... மேலும் பார்க்க