செய்திகள் :

புதுக்கடை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

post image

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

இனயம் பகுதியை சோ்ந்தவா் பங்கிராஜ் (62). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக புதுக்கடை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது 10 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து பங்கிராஜை கைது செய்தனா்.

3 போ் மீது வழக்கு: புதுக்கடை அம்மாள் நகா் பகுதியை சோ்ந்த முருகன் மகன் விக்னேஷ் (28). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த மோகன் மகன் விக்னேஷ்(27), பிரபு(42), ஸ்ரீகுமாா்(38) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில்,வெள்ளிக்கிழமை அம்மாள் நகரில் நின்ற விக்னேஷை மேற்கூறிய3 பேரும் தாக்கினராம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மூவா் மீதும் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க