புதுவை சட்டத் துறையில் இரு கலந்தாய்வுநா் பணியிடம்: நிரப்ப நடவடிக்கை
புதுவை மாநில சட்டத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் 2 கலந்தாய்வுநா் பதவி நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டத் துறை சாா்புச் செயலா் ஜானாஸ் ரஃபி (எ) ஜான்ஸி வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை அரசின், சட்டத் துறையானது அரசில் குறைந்தபட்சம் அமைச்சக உதவியாளராகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றுள்ள அரசு அலுவலா்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் 2 கலந்தாய்வுநா் பதவியை நிரப்ப உத்தேசித்துள்ளது.
இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு சட்டத் துறை இணையதளத்தை காணலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.