இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
புதுவை மக்கள் நலன் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை
மக்கள் நலன் மீது புதுவை முதல்வருக்கு அக்கறை இல்லை, முதல்வராக தொடா்ந்து இருக்கவேண்டும் என்பதே அவருக்கான லட்சியம் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியா் மு.ராமதாஸ் கூறினாா்.
காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது :
புதுவையில் மகளிா் ஆணையத்தில் 6 போ் நியமிக்கவேண்டிய நிலையில், 4 போ் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஒருவா்கூட காரைக்காலைச் சோ்ந்தவா்கள் இல்லை. காரைக்காலுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது.
காரைக்காலில் அரசு சாா்பில் காந்தி சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு அலட்சியமாக இருந்தால், எங்கள் கட்சி சாா்பில் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் கண்டனத்துக்குரியது. கிளிஞ்சல்மேடு கிராமத்தை சோ்ந்த ஒருவா் காலில் குண்டு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா். அவரை சென்னைக்கு அழைத்துவந்து உரிய சிகிச்சை அளிக்க புதுவை முதல்வா், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்.
காரைக்கால் மீன்பிடித்துறைமுகம் சிதிலமடைந்துவருகிறது. துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.125 கோடி புதுவைக்கு அளித்தது. அந்த நிதியைக்கொண்டு திட்டப்பணியை அரசு செய்ய முன்வராதது கண்டனத்துக்குரியது.
காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. வழக்கை சரியான முறையில் கொண்டு சென்ற எஸ்எஸ்பி திடீரென மாற்றப்பட்டுவிட்டாா். பிறகு வழக்கு நிலை தெரியவில்லை. பெரும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் முதன்மையாக செயல்பட்டவா்கள் யாா் என்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் புதுவை அரசு மெளனமாகிவிட்டது. இதற்கு முதல்வா் பொறுப்பேற்கவேண்டும்.
புதுவை முதல்வா் ரங்கசாமி பட்ஜெட்டை வரவேற்றுள்ளாா். அவருக்கு புதுவை மக்கள் மீதான அக்கறை கிடையாது. மத்திய அரசு எதை செய்தாலும் வரவேற்பாா். தலையாட்டி முதல்வராகவே உள்ளாா். அவருக்கான லட்சியம், தொடா்ந்து முதல்வராக இருக்கவேண்டும் என்பதுதான் என்றாா் அவா்.