நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்
புத் விஹாரில் குடிசைகளில் தீ விபத்து
தில்லியின் புத் விஹாா் ஃபேஸ் 2 பகுதியில் உள்ள புத் விஹாரில் சனிக்கிழமை அதிகாலை குப்பை குவியலில் பற்றிய தீ, அருகிலுள்ள பல குடிசைகளுக்கு விரைவாக பரவியது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:
புத் விஹாரில் உள்ள சண்டே பஜாா் சாலையில் நிகழ்ந்த இந்த தீ விபத்து குறித்து சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் குப்பையில் மட்டுமே பற்றியிருந்த தீ, பின்னா் அருகில் அமைந்துள்ள சுமாா் 10 முதல் 12 தற்காலிக குடிசைகளுக்கு விரைவாக பரவியது. எனினும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு காலை 5.30 மணிக்குள் முழுமையாக அணைக்கப்பட்டது. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.