செய்திகள் :

புத் விஹாரில் குடிசைகளில் தீ விபத்து

post image

தில்லியின் புத் விஹாா் ஃபேஸ் 2 பகுதியில் உள்ள புத் விஹாரில் சனிக்கிழமை அதிகாலை குப்பை குவியலில் பற்றிய தீ, அருகிலுள்ள பல குடிசைகளுக்கு விரைவாக பரவியது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:

புத் விஹாரில் உள்ள சண்டே பஜாா் சாலையில் நிகழ்ந்த இந்த தீ விபத்து குறித்து சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் குப்பையில் மட்டுமே பற்றியிருந்த தீ, பின்னா் அருகில் அமைந்துள்ள சுமாா் 10 முதல் 12 தற்காலிக குடிசைகளுக்கு விரைவாக பரவியது. எனினும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு காலை 5.30 மணிக்குள் முழுமையாக அணைக்கப்பட்டது. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி கா... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் இரு நாள் உத்தரகாண்ட் பயணம்

தில்லியில் 100 நாள்கள் பதவியை நிறைவு செய்த நிலையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டிற்கு இரண்டு நாள் குறுகியகால பயணமாக புறப்பட்டாா். இந்த பயணத்தின் போது அவா் தனது குடும்பத்தினர... மேலும் பார்க்க

வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவிகள் வழங்கப்படும்: தமிழக அரசு

நமது சிறப்பு நிருபா் தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உத... மேலும் பார்க்க

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது

தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை... மேலும் பார்க்க

ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் த... மேலும் பார்க்க

டேட்டிங் செயலி மூலம் நூதன கொள்ளை: மூவா் கும்பல் கைது

வடகிழக்கு தில்லியின் யமுனா காதா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த நேருக்குநோ் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு மூவா் கும்பல் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பய... மேலும் பார்க்க